தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் கோட்டாவில் சேர்க்கை அதிகரிப்பு; காரணம் இதுதான்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் கோட்டாவில் சேர்க்கை அதிகரிப்பு; காரணம் இதுதான்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் கோட்டாவில் சேர்க்கை அதிகரிப்பு; காரணம் இதுதான்!

4


UPDATED : ஆக 11, 2026 10:38 AM

ADDED : ஆக 11, 2026 08:45 AM

Follow on GoogleFavourite on Google

4

UPDATED : ஆக 11, 2026 10:38 AM ADDED : ஆக 11, 2026 08:45 AM


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது சிறப்பு நிருபர்-

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மாணவர் விசா கட்டுப்பாடுகள், மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கள் மற்றும் குறைந்த கல்லி கட்டணம் ஆகியவற்றின் விளைவாக, இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் கோட்டா சேர்க்கை அதிகரித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலவும் விசா கட்டுப்பாடுகள், பல்கலைக்கழகத்தின் உயர்ந்த உலகளாவிய தரவரிசை மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கான கட்டணச் சலுகைகள் போன்ற காரணங்களால் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை 20 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு 136 மாணவர்கள் சேர்க்கப்பட்ட நிலையில், 2026-27 கல்வியாண்டில் 160 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்கள் துபாய், சவூதி அரேபியா, ஓமன், கத்தார், சிங்கப்பூர், இங்கிலாந்து, கொரியா, ஜப்பான், கனடா, அங்கோலா, அஜர்பைஜான், ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள். அண்ணா பல்கலைக்கழகம் கட்டணம் குறைந்ததாக இருப்பதால், இவர்கள் இங்கு சேர்ந்துள்ளனர்.

கணினி அறிவியல் பொறியியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல், தகவல் தொடர்புப் பொறியியல் போன்ற படிப்புகளில் சேருபவர்களிடமிருந்து பல்கலைக்கழகம் 7,500 அமெரிக்க டாலர் (ரூ.7 லட்சத்து 51 ஆயிரம்) கட்டணம் வசூலிக்கிறது. மற்ற படிப்புகளுக்கு, கட்டணம் 3,750 அமெரிக்க டாலர் (ரூ.3.58 லட்சம்) ஆகும்.

இந்த ஆண்டு, மாணவர்கள் கணினி அறிவியல் பொறியியல் மற்றும் மின்னணுவியல், தகவல் மற்றும் தொடர்பு பொறியியல் தவிர, பலதரப்பட்ட பாடப்பிரிவுகளில் சேர்ந்துள்ளனர். வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் உயிரி மருத்துவப் பொறியியல், வேதியியல் பொறியியல், தொழில்துறைப் பொறியியல், மின்னணுவியல் பொறியியல், சுரங்கவியல், ரோபோட்டிக்ஸ், உற்பத்திப் பொறியியல் மற்றும் புவித் தகவல் அறிவியல் போன்ற இளங்கலைப் படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.

2026-27 கல்வியாண்டிற்காக அண்ணா பல்கலை அதிக விண்ணப்பங்களை பெற்றுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் நான்கு வளாகங்களில் தற்போது 50 நாடுகளை சேர்ந்த 600 வெளிநாடு வாழ் இந்தியர்களும், வெளிநாட்டினரும் பயின்று வருகின்றனர் என பல்கலைக்கழகம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us