இன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்: 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
இன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்: 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
ADDED : அக் 11, 2025 02:13 PM

சென்னை: நீலகிரி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (அக் 11) ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: நீலகிரி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (அக் 11) ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இன்று முதல் வரும் அக் 17ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* மயிலாடுதுறை
* நாகப்பட்டினம்
* திருநெல்வேலி
* தென்காசி
* மதுரை
* சிவகங்கை
* திண்டுக்கல்
* திருப்பூர்
* கோவை
* கரூர்
* திருச்சி
* நாமக்கல்
* சேலம்
* ஈரோடு
நாளை (அக் 12) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* கோவை
* சேலம்
* நாமக்கல்
* திருச்சி
* திண்டுக்கல்
* தேனி
* மதுரை
* தென்காசி
* திருநெல்வேலி
நாளை மறுநாள் (அக் 13) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* கோவை
* ஈரோடு
* திருப்பூர்
* சேலம்
* நாமக்கல்
* திண்டுக்கல்
* தேனி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.