sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் மோதல் முற்றியது: காபூல் மீது பாக்., விமானப்படை குண்டு வீச்சு

/

பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் மோதல் முற்றியது: காபூல் மீது பாக்., விமானப்படை குண்டு வீச்சு

பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் மோதல் முற்றியது: காபூல் மீது பாக்., விமானப்படை குண்டு வீச்சு

பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் மோதல் முற்றியது: காபூல் மீது பாக்., விமானப்படை குண்டு வீச்சு


ADDED : அக் 10, 2025 10:22 AM

Google News

ADDED : அக் 10, 2025 10:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தானிய தலிபான் அமைப்பினரை குறிவைத்து பாகிஸ்தான் விமான படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு, அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, அங்கு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து அங்கு தலிபான்கள் பல்வேறு கட்டுப்பாடு களை விதித்து வருகின்றனர். இந்த சூழலில், காபூலில் உள்ள பாகிஸ்தானிய தலிபான் அமைப்பினரை குறிவைத்து பாகிஸ்தான் விமான படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் உதவி செய்துள்ளது என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. காபூலில் இரண்டு சக்திவாய்ந்த குண்டு வெடிப்புச் சத்தங்கள் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நிகழ்ந்தது. நகரின் வான்வெளியில் ஒரு போர் விமானத்தின் சத்தம் கேட்டதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கிழக்கு காபூலில் உள்ள பாகிஸ்தானிய தலிபான் அமைப்பு தலைவர் நூர் வாலி மெஹ்சூத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என்று உயர்மட்ட புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நூர் வாலி மெஹ்சுத் பாதுகாப்பாக இருக்கிறார். இருப்பினும் அவரது மகன் தாக்குதலில் கொல்லப்பட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமிர்கான் முட்டாகி, எட்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நேரத்தில், இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஏற்கனவே, பாகிஸ்தானுக்கும், தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் மேலும் பதற்றமான சூழலை உருவாக்கும் என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us