டிச.,1ம் தேதி துவங்குகிறது பார்லி குளிர்கால கூட்டத் தொடர்
டிச.,1ம் தேதி துவங்குகிறது பார்லி குளிர்கால கூட்டத் தொடர்
ADDED : நவ 08, 2025 01:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டிச.,1ம் தேதி முதல் 19ம் தேதி வரை குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும் என்று பார்லி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; பார்லி குளிர்கால கூட்டத் தொடரை டிச.,1 முதல் டிச.,19ம் தேதி வரை நடத்துவது தொடர்பான அரசின் முன்மொழிவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். மக்களாட்சியை வலுப்படுத்தவும், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவும், அர்த்தமுள்ள அமர்வாக இது அமையும் என எதிர்பார்க்கிறோம், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத் தொடரில் வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் தீவிர திருத்தப் பணிகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

