sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோவையில் இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்தார் மோடி

/

கோவையில் இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்தார் மோடி

கோவையில் இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்தார் மோடி

கோவையில் இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்தார் மோடி

1


UPDATED : நவ 19, 2025 02:52 PM

ADDED : நவ 19, 2025 02:11 PM

Google News

1

UPDATED : நவ 19, 2025 02:52 PM ADDED : நவ 19, 2025 02:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து மதியம் விமானத்தில், பிரதமர் மோடி கோவை வந்தார். அவர், தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், கோவை கொடிசியா வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இயற்கை விவசாயிகள் அமைத்த அரங்குகள் மற்றும் கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். இவ்விழாவிற்கு கவர்னர் ரவி தலைமை வகித்தார். தொடர்ந்து, 'பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி' திட்டத்தில், 9 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில், 21வது தவணையாக, ரூ.18 ஆயிரம் கோடி நிதியை பிரதமர் மோடி விடுவிக்கிறார்.

வரவேற்பு

முன்னதாக, கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் சாமிநாதன், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இருந்து கொடிசியா வளாகத்திற்கு காரில் வந்த பிரதமர் மோடிக்கு சாலையின் இருபுறமும், பாரம்பரிய கலைநிகழ்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us