ஓமனில் கால் பதித்த பிரதமர் மோடி; கையெழுத்தாகும் முக்கிய ஒப்பந்தங்கள்
ஓமனில் கால் பதித்த பிரதமர் மோடி; கையெழுத்தாகும் முக்கிய ஒப்பந்தங்கள்
UPDATED : டிச 17, 2025 09:48 PM
ADDED : டிச 17, 2025 09:06 PM

மஸ்கட்; அரசு முறை பயணமாக பிரதமர் மோடி, ஓமன் சென்றடைந்தார்.
ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார். முதலில் ஜோர்டானுக்கும், அதன் பின்னர் எத்தியோப்பியாவுக்கு அவர் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
எத்தியோப்பியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ஓமன் சென்றார். ஓமன் மன்னரும், பிரதமருமான சுல்தான் ஹைதம் பின் தாரிக் அழைப்பை ஏற்று, அவர் அங்கு சென்றுள்ளார். ஓமன் தலைநகர் மஸ்கட் சென்ற, பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது குறித்து பிரதமர் மோடி தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது;
ஓமன் நாட்டின் மஸ்கட்டில் தரையிறங்கினேன். இது இந்தியாவுடன் நீடித்த நட்பு மற்றும் ஆழமான வரலாற்று தொடர்புகளைக் கொண்ட நிலம். இந்த வருகையானது இரு நாடுகளின் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராயவும், கூட்டாண்மைக்கு புதிய உத்வேகத்தை சேர்க்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

