sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: கால்பந்து மைதானத்தில் 4 பேர் பலி

/

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: கால்பந்து மைதானத்தில் 4 பேர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: கால்பந்து மைதானத்தில் 4 பேர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: கால்பந்து மைதானத்தில் 4 பேர் பலி

1


ADDED : அக் 11, 2025 08:37 PM

Google News

1

ADDED : அக் 11, 2025 08:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: அமெரிக்காவின் மிசிசிபியில் கால்பந்து மைதானத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் கால்பந்து மைதானம் ஒன்று உள்ளது. இங்கு திடீரென மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் பலத்த காயமடைந்தனர். இதில் நான்கு பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

காயமடைந்தவர்களில் நான்கு பேர் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுவரை துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை அதிகாரிகள் வெளியிட மறுத்து விட்டனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர். சமீபகாலமாக அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த மாதம் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

அதை தொடர்ந்து, வாகன நிறுத்துமிடத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். கடந்த அக்டோபர் 9ம் தேதி ஹூஸ்டன் பகுதியில் வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us