sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

புயல், வெள்ளத்தால் இலங்கை பாதிப்பு; 450 மில்லியன் டாலர் இந்தியா நிதியுதவி

/

புயல், வெள்ளத்தால் இலங்கை பாதிப்பு; 450 மில்லியன் டாலர் இந்தியா நிதியுதவி

புயல், வெள்ளத்தால் இலங்கை பாதிப்பு; 450 மில்லியன் டாலர் இந்தியா நிதியுதவி

புயல், வெள்ளத்தால் இலங்கை பாதிப்பு; 450 மில்லியன் டாலர் இந்தியா நிதியுதவி

8


UPDATED : டிச 24, 2025 05:32 AM

ADDED : டிச 23, 2025 01:45 PM

Google News

8

UPDATED : டிச 24, 2025 05:32 AM ADDED : டிச 23, 2025 01:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொழும்பு: புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 4 ஆயிரம் கோடி ரூபாய்) நிதியுதவி வழங்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது.

அண்மையில் டிட்வா புயல் காரணமாக இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக, 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா மீட்பு படையினர் மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி இந்தியா உதவி செய்து இருந்தது. இந்நிலையில், பாதிப்புகளை நேரில் பார்வையிட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர் இலங்கை வெ ளியுறவுத்துறை அமைச்சர் விஜித் ஹெராத்துடன் பேச்சு நடத்தினார். இருநாட்டு தலைவர்களும் டிட்வா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகேவுடனும் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். பின்னர் ஜெய்சங்கர் கூறியதாவது: புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் நிதியுதவியை இந்தியா வழங்கும். இதில் 350 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 4 ஆயிரம் கோடி ரூபாய்) சலுகையுடன் கடன் மற்றும் 100 மில்லியன் டாலர் மானியம் அடங்கும்.

இந்த நிதி புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட துறைகளுக்கும், சாலை, ரயில் மற்றும் சேதம் அடைந்த பாலங்களை சரி செய்ய பயன்படுத்தப்படும். 2022ம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வந்துகொண்டிருந்த நிலையில், இந்த இயற்கை பேரிடர் புதிய சிரமங்களை உருவாக்கியுள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டு வருபவதற்கு இலங்கையுடன் இணைந்து செயல்படுமாறு பிரதமர் மோடி எங்களுக்கு அறிவுறுத்தினார். இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.






      Dinamalar
      Follow us