ஓய்வு பெற்றார் கவாய்: தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் சூர்யகாந்த்
ஓய்வு பெற்றார் கவாய்: தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் சூர்யகாந்த்
ADDED : நவ 24, 2025 05:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில், 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இன்று தன் பணியை துவங்க உள்ள சூர்ய காந்த், 2027, பிப்., 9ம் தேதி வரை இப்பதவியில் இருப்பார்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக 2019ல் சூர்யகாந்த் பொறுப்பேற்றார். ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம், 'பெகாசஸ் ஸ்பைவேர்' வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வுகளில் நீதிபதி சூர்யகாந்த் இடம் பெற்றிருந்தார்.

