sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வெற்றுப்பெருமை பேசும் முதல்வர் விவசாயிகளை ஏமாற்றாமல் இழப்பீடு வழங்கணும்; நயினார் நாகேந்திரன்

/

வெற்றுப்பெருமை பேசும் முதல்வர் விவசாயிகளை ஏமாற்றாமல் இழப்பீடு வழங்கணும்; நயினார் நாகேந்திரன்

வெற்றுப்பெருமை பேசும் முதல்வர் விவசாயிகளை ஏமாற்றாமல் இழப்பீடு வழங்கணும்; நயினார் நாகேந்திரன்

வெற்றுப்பெருமை பேசும் முதல்வர் விவசாயிகளை ஏமாற்றாமல் இழப்பீடு வழங்கணும்; நயினார் நாகேந்திரன்

2


ADDED : நவ 26, 2025 04:48 PM

Google News

2

ADDED : நவ 26, 2025 04:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வெற்றுப்பெருமை பேசும் முதல்வர் ஸ்டாலின், விவசாயிகளை ஏமாற்றாமல் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை: திமுக ஆட்சியில் தொடர்ச்சியாக மழைவெள்ளத்தில் மூழ்கும் நெற்பயிர்களால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். சிதம்பரம் அருகே உள்ள பூவாலை மேற்கு கிராமத்தில், கனமழையின் காரணமாக சுமார் 750 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியிருப்பது பெருங்கவலை அளிக்கிறது.

இப்பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான பரவனாறு அருவாமுக்குத் திட்டத்தை நான்காண்டுகளாகக் கிடப்பில் போட்டுவிட்டு சமீபத்தில் அப்பணிகளைத் தொடங்கிய திமுக அரசு, ஆறுகளை முழுமையாகத் தூர் வாராமலும், தடுப்புச் சுவர் கட்டாமலும் இழுத்தடிப்பதே மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கான காரணம். ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து நெற்பயிர்களை வெள்ளத்திலும் விவசாயிகளைக் கண்ணீரிலும் மூழ்கவிடும் திமுக அரசே இந்தப் பேரழிவிற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் 'நானும் டெல்டாகாரன்தான்' என்று வெற்றுப் பெருமை பேசி வரும் முதல்வர் ஸ்டாலின் விவசாயப் பெருமக்களை ஏமாற்றாமல், சேதமடைந்த நெற்பயிர்களை உடனடியாக ஆய்வு செய்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50,000 வீதம் உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us