sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது சரியே: சொல்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

/

இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது சரியே: சொல்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது சரியே: சொல்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது சரியே: சொல்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

28


ADDED : செப் 09, 2025 06:56 AM

Google News

28

ADDED : செப் 09, 2025 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீவ்: ''ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் அதிகளவில் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூடுதல் வரி விதித்தது சரியான யோசனை,'' என, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், மூன்று ஆண்டுகளைத் தாண்டியும் தொடர்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல முயற்சிகள் எடுத்தும் பலன் கிடைக்கவில்லை .

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக 50 சதவீத வரி விதிப்பை டிரம்ப் அமல்படுத்தியுள்ளார். இதில் 25 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அபராதம் என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நடவடிக்கை நியாயமற்றது என்று இந்தியா தெரிவித்திருந்தது. மேலும், உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தக ஒப்பந்தங்கள் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது, அமெரிக்காவின் வரி விதிப்பு யோசனை சரியானது தான். ஐரோப்பிய நாடுகளும் இதில் விதிவிலக்கல்ல. ரஷ்ய அதிபர் புடின் மீது கூடுதல் அழுத்தம் தேவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சில ஐரோப்பிய நாடுகள், தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குகின்றன; இது நியாயமில்லை.ரஷ்யாவிடம் இருந்து எந்த வகையான எரிபொருளையும் வாங்குவதை நாம் நிறுத்த வேண்டும்.

ரஷ்யாவுடன் தொ டர்ந்து ஒப்பந்தங்கள் செய்யும் நாடுகள் மீது, வரிகளை விதிப்பது சரியான யோசனை. கொலையாளியை நிறுத்துவதற்கான ஒரே ஒரு வழி இதுதான். எதிராளிகளின் ஆயுதத்தை பறிப்பதுதான் சரி; எரிசக்தி தான் அவர்களுடைய ஆயுதம்.

என் நா டு ஏவுகணைகளால் சூழப்பட்டிருக்கும் போது, போர் நிறுத்தம் குறித்து பேச நான் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு செல்ல முடியாது; அது சாத்தியமற்றது. வேண்டுமானால், ரஷ்ய அதிபர் புடின், எங்களுடைய தலைநகர் கீவ்க்கு வரலாம்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடினுடன் போர் நிறுத்தம் குறித்து நடத்திய பேச்சினால் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதற்கு மாறாக ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வலுவான பதிலை நான் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us