sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பனிமூட்டத்தால் ஏற்பட்ட விபத்து: டில்லி - ஆக்ரா சாலையில் பஸ்கள் தீப்பற்றியதில் 13 பேர் பலி

/

பனிமூட்டத்தால் ஏற்பட்ட விபத்து: டில்லி - ஆக்ரா சாலையில் பஸ்கள் தீப்பற்றியதில் 13 பேர் பலி

பனிமூட்டத்தால் ஏற்பட்ட விபத்து: டில்லி - ஆக்ரா சாலையில் பஸ்கள் தீப்பற்றியதில் 13 பேர் பலி

பனிமூட்டத்தால் ஏற்பட்ட விபத்து: டில்லி - ஆக்ரா சாலையில் பஸ்கள் தீப்பற்றியதில் 13 பேர் பலி

12


UPDATED : டிச 16, 2025 02:54 PM

ADDED : டிச 16, 2025 07:40 AM

Google News

12

UPDATED : டிச 16, 2025 02:54 PM ADDED : டிச 16, 2025 07:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில், அதிகாலையில் பனிமூட்டம் காரணமாக, 6 பஸ்கள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதி தீப்பற்றிக் கொண்டன. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

டில்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கின்றன. இந்த சூழலில், பனிமூட்டம் காரணமாக, அடர்ந்த மூடுபனி காரணமாக ஆறு பஸ்களும், இரண்டு கார்களும் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. பின்னர் தீப்பற்றி எரிய தொடங்கியது. முதலில் ஒரு பஸ்சில் தீப்பற்றியது.

4 பேர் பலி

பிறகு அடுத்தடுத்து பஸ்களில் தீ வேகமாக பரவியது என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே பல தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் போலீசார் விரைந்தனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்தது. இந்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

பல வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து சாம்பலானதால், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணியில் சிக்கல் நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் அதிகாலை பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

முதல்வர் யோகி இரங்கல்

இந்த விபத்து குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரா மாவட்டத்தில் யமுனா விரைவுச் சாலையில் நடந்த விபத்தில் உயிர் இழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த சம்பவம் மனவேதனை அளிக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயம் அடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவாக குணமடையவும் நான் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us