sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தண்ணீரை பணம் போல் பார்த்து பார்த்து செலவழிக்கணும்: முதல்வர் ஸ்டாலின்

/

தண்ணீரை பணம் போல் பார்த்து பார்த்து செலவழிக்கணும்: முதல்வர் ஸ்டாலின்

தண்ணீரை பணம் போல் பார்த்து பார்த்து செலவழிக்கணும்: முதல்வர் ஸ்டாலின்

தண்ணீரை பணம் போல் பார்த்து பார்த்து செலவழிக்கணும்: முதல்வர் ஸ்டாலின்

4


ADDED : அக் 11, 2025 12:22 PM

Google News

4

ADDED : அக் 11, 2025 12:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தண்ணீரை, பணம் செலவழிப்பது போல் பார்த்து பார்த்து செலவழிக்க வேண்டும்'' என கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார்.

கிராம சபை கூட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள். இந்தியா கிராமங்களில் தான் வாழ்கிறது. கிராம பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொண்டு இருக்கிறோம். 10 ஆயிரம் கிராமங்களை இணையம் மூலம் இணைத்து முதல் முறையாக கிராமசபை கூட்டம் நடக்கிறது. இந்தியாவில் எந்த முதல்வரும் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றதில்லை. முதல்வராக 3வது முறையாக கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன்.

6 கிராம சபை கூட்டங்கள்

கிராம சபைக் கூட்டங்கள் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை உணர வைக்கும் தருணம். கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்க உரிய உரிமைகளை அளிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம். அதற்காகத் தான் ஆண்டுதோறும் 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இது கிராமங்களின் தேவைகள், வளர்ச்சி இலக்குகள், நலன் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றும் விழா. குடியிருப்பு. சாலை, தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்கி பொதுப் பெயர்களை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

3 தீர்மானங்கள்

கிராம சபையில் மக்கள் ஆலோசித்து 3 முக்கிய தேவைகளை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். குடிசையில்லா தமிழ்நாடு இலக்கை எட்ட இதுவரை 99,453 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு வழங்கப்பட்டன. கிராமப்புற முன்னேற்றத்தை சாத்தியப்படுத்தியது சுய உதவி குழு திட்டம். மகளிர் சுய உதவி குழுக்களின் அடுத்த கட்ட பாய்ச்சல்தான் மகளிர் உதவித்தொகை. மகளிருக்கான விடியல் பயணத்திட்டம், பெண்கள் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பணத்தை தண்ணீராக செலவழிப்பதாக சொல்வார்கள். ஆனால் தண்ணீரை தான் பணம் போல் பார்த்து பார்த்து செலவழிக்க வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.

படிப்பு முக்கியம்

கிராமங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் யாருக்கும் அலட்சியம் கூடாது.

ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் படிப்பதை உறுதி செய்ய வேண்டும். குழந்தை தொழிலாளர்களாக ஈடுபடுத்தினால் மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் கூறி மீட்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். சின்ன சின்ன விஷயங்களை சரி செய்தால் பெரிய பெரிய மாற்றங்கள் ஏற்படும். பருவமழையை எதிர்கொள்ள அனைத்து ஊராட்சிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

கலந்துரையாடல்

செங்கல்பட்டு மாவட்டம் கோவளம், தென்காசி மாவட்டம் முள்ளிக்குளம் ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார். அவர், கிராமங்களில் சாலை வசதி உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். உங்களுக்கு ஏதாவது வேணுமா? பிரச்னை ஏதாவது இருக்கா? என்ற கேள்விகளை மக்களிடம் ஸ்டாலின் எழுப்பி குறைகளை கேட்டறிந்தார்.








      Dinamalar
      Follow us