மேற்காசியாவில் பதற்றங்களை குறைக்க வேண்டும்; போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா வலியுறுத்தல்
மேற்காசியாவில் பதற்றங்களை குறைக்க வேண்டும்; போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா வலியுறுத்தல்
ADDED : மார் 02, 2026 09:35 AM

மாஸ்கோ: அமெரிக்கா - ஈரான் இடையேயான போரை நிறுத்தி, மேற்காசியாவில் அமைதியைக் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
அணுஆயுத ஒப்பந்தத்திற்கு பிடி கொடுக்காத ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் ஆட்சியாளர் கமேனி உள்பட 48 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஈரான் முழுவதும் உள்ள அரசு மற்றும் ராணுவத் தளங்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையேயான போரை நிறுத்தி, மேற்காசியாவில் அமைதியைக் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை; தற்போது நிலவும் பதற்றங்களை உடனடியாகக் குறைக்கவும், வன்முறைகளை நிறுத்தவும், அரசியல் மற்றும் ராஜதந்திர செயல்பாடுகளை மீண்டும் தொடங்கவும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
ஐநா சபையின் அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் அடிப்படையில், அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும், என வலியுறுத்தியுள்ளது.

