உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 11, 2026 07:37 PM

அ நிறம் | அளவு
வாஷிங்டன்: வெனிசுலாவில் செய்தது போல ஈரானின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தை கைப்பற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கா ஈரான் இடையே மீண்டும் போர் துவங்கியுள்ளது. ஈரான் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப் போவதாக ட்ரம்ப் கூறி வருகிறார்
இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:
கடற்படை விமானப்படை ரேடார் ஆகியவற்றை இழந்துள்ள ஈரான் மீது கடுமையாக தாக்குதல் நடத்துவோம். அதே நேரத்தில் கார்க் தீவு மற்றும் எண்ணெய் உள் கட்டமைப்புகளை கைப்பற்றும் நாள் வெகு தூரத்தில் இல்லை. வெனிசுலாவில் செய்தது போல் ஈரானின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தையை கைப்பற்றுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்
