தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ ஏப்ரல் சம்பளம் பெறுவதில் 3500 ஆசிரியர்களுக்கு சிக்கல்

ஏப்ரல் சம்பளம் பெறுவதில் 3500 ஆசிரியர்களுக்கு சிக்கல்

ஏப்ரல் சம்பளம் பெறுவதில் 3500 ஆசிரியர்களுக்கு சிக்கல்


ADDED : ஏப் 26, 2024 02:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2024 02:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், 8000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், கே.ஹெச்., தலைப்பில், 3500 ஆசிரியர்கள் சம்பளம் பெறுகின்றனர். இவர்களுக்கு பணி ஆணை, அவ்வப்போது நீட்டிக்கப்படுகிறது. அதன்படி மார்ச்சுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில் பணி நீட்டிப்பு ஆணை இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் ஏப்ரல் சம்பளம் பெறுவதற்கான ரசீது அனுப்பப்படவில்லை.

அகவிலைப்படி நிலுவையும், மற்ற அரசு ஆசிரியர்கள் பெற்ற நிலையில் இவர்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால் நீட்டிப்பு ஆணையை, உடனே வெளியிட்டு, அகவிலைப்படி நிலுவை, சம்பளம் வழங்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us