sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

எம்.ஜி.ஆர்., - ஜெ., பற்றி சர்ச்சை பேச்சு: மந்திரிக்கு எதிராக அ.தி.மு.க., கொந்தளிப்பு

/

எம்.ஜி.ஆர்., - ஜெ., பற்றி சர்ச்சை பேச்சு: மந்திரிக்கு எதிராக அ.தி.மு.க., கொந்தளிப்பு

எம்.ஜி.ஆர்., - ஜெ., பற்றி சர்ச்சை பேச்சு: மந்திரிக்கு எதிராக அ.தி.மு.க., கொந்தளிப்பு

எம்.ஜி.ஆர்., - ஜெ., பற்றி சர்ச்சை பேச்சு: மந்திரிக்கு எதிராக அ.தி.மு.க., கொந்தளிப்பு

11


ADDED : ஆக 12, 2024 05:14 AM

Google News

ADDED : ஆக 12, 2024 05:14 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : அ.தி.மு.க., தலைவர்களான எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா குறித்து, அமைச்சர் அன்பரசன் தரக்குறைவாக பேசியதற்கு, அ.தி.மு.க., - அ.ம.மு.க., மற்றும் பா.ஜ., தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விபரம்:

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்:



தமிழகத்தில் பஸ்கள் ஓட்டை உடைசலாக உள்ளன. தமிழக அரசு கார் பந்தயத்திற்கு செலவிடும் பணத்தை, பஸ்களை சீரமைக்க செலவழிக்கலாம்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா குறித்து பேச அமைச்சர் அன்பரசனுக்கு முதலில் தகுதி வேண்டும். தி.மு.க., ஆட்சியில் அடாவடித்தனம், அராஜகம், கள்ளச்சாராயம், கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது. அதுவே அமைச்சருக்கான தகுதியாக இருக்கிறது. மக்களால் போற்றப்படும் தலைவியை சிறுமைப்படுத்தும் விதமாக பேசி உள்ளார். இதுபோல் பேசினால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி:


மற்ற கட்சியினர் பெண்கள் மீது அவதுாறு பேசினால் பொங்கியெழும் தி.மு.க., துணைப் பொதுச் செயலர் கனிமொழி, இதற்கு என்ன சொல்லப் போகிறார்?

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்:


மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி குறித்து, மறைந்த நாஞ்சில் மனோகரன் எழுதிய, 'கருவின் குற்றம்' என்ற கவிதை குறித்தும்; கவிஞர் கண்ணதாசன் எழுதிய, 'வனவாசம்' குறித்தும், ஜெயலலிதாவின் தொண்டர்கள் பேச ஆரம்பித்தால், அன்பரசன் போன்ற தி.மு.க.,வினரில் ஒருவர் கூட வெளியில் தலைகாட்ட முடியாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

என்ன பேசினார் அன்பரசன்?

தி.மு.க., இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம், சென்னை அய்யப்பன்தாங்கலில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் பங்கேற்ற தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:
தங்களுக்கு சிறு அளவில் கூட்டம் கூடியதும், நடிகர்கள் முதல்வராக ஆசைப்படுகின்றனர்; அதற்காக கட்சி துவங்குகின்றனர். இப்படித்தான், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அரசியலுக்கு வந்தனர். எம்.ஜி.ஆருக்குப் பின் வந்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., பலத்தில் அரசியல் செய்தார். இருந்தபோதும் அவர்களுக்குப் பின், அரசியலுக்கு வந்த எந்த நடிகரும் சோபிக்கவில்லை. இதுதான், தமிழக அரசியல் நிலவரம்.
அரசியலில் அவர்கள் ஏன் தோற்கின்றனர் என யோசித்தால், ஒரு உண்மை புரியும். அவர்களுக்கு போதுமான அளவுக்கு அரசியல் அறிவு இருப்பதில்லை என்பதுதான்.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.








      Dinamalar
      Follow us