sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

ஹிந்தியில் கருத்தரங்கு நடத்திய தி.மு.க., கூட்டணி கட்சி

/

ஹிந்தியில் கருத்தரங்கு நடத்திய தி.மு.க., கூட்டணி கட்சி

ஹிந்தியில் கருத்தரங்கு நடத்திய தி.மு.க., கூட்டணி கட்சி

ஹிந்தியில் கருத்தரங்கு நடத்திய தி.மு.க., கூட்டணி கட்சி

6


ADDED : பிப் 24, 2025 02:00 AM

Google News

ADDED : பிப் 24, 2025 02:00 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு கருத்தரங்கம், முழுமையாக ஹிந்தியில் நேற்று நடத்தப்பட்டது.

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பீஹார், உ.பி., உத்தரகண்ட், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

இந்திய கம்யூ., கட்சி சார்ந்த ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் சார்பில், புலம்பெயர்ந்த தொழிலாளர் பாதுகாப்பு கருத்தரங்கம், திருப்பூர் - ஊத்துக்குளி ரோட்டிலுள்ள ஏ.ஐ.டி.யு.சி., அலுவலக அரங்கில் நேற்று நடந்தது.

முன்னதாக, கருத்தரங்கில் பங்கேற்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்து, திருப்பூர் முழுதும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

நேற்றைய கருத்தரங்குக்கு, பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு ஹிந்தி மட்டுமே தெரியும் என்பதால், கருத்தரங்கம் முழுதும் ஹிந்தியிலேயே நடத்தப்பட்டது.

ஏ.ஐ.டி.யு.சி., தேசிய செயலர் வஹிதா நிஜாம், புலம்பெயர்ந்த தொழிலாளர் பாதுகாப்புக்காக ஏ.ஐ. டி.யு.சி., மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, ஹிந்தியிலேயே பேசினார்.

நேற்று நடந்த கருத்தரங்கில், தமிழில் பேசிய எம்.பி., சுப்பராயன், ஏ.ஐ. டி.யு.சி., மாநில தலைவர் காசி விஸ்வநாதன் உள்ளிட்டோரது பேச்சுகள், ஹிந்தியில் மொழிபெயர்த்து கூறப்பட்டன.

தமிழகத்தில், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், தி.மு.க.,வின் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூ., சார்பில், முழுக்க முழுக்க ஹிந்தியில் கருத்தரங்கு நடத்தப்பட்டது, பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us