sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

குட்கா, கஞ்சா: இனியாவது ஒழித்துக்கட்டுமா போலீஸ்!

/

குட்கா, கஞ்சா: இனியாவது ஒழித்துக்கட்டுமா போலீஸ்!

குட்கா, கஞ்சா: இனியாவது ஒழித்துக்கட்டுமா போலீஸ்!

குட்கா, கஞ்சா: இனியாவது ஒழித்துக்கட்டுமா போலீஸ்!

4


UPDATED : ஜூன் 23, 2024 07:24 AM

ADDED : ஜூன் 22, 2024 11:30 PM

Google News

UPDATED : ஜூன் 23, 2024 07:24 AM ADDED : ஜூன் 22, 2024 11:30 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச் சாராயம் இறப்பு எதி ரொலியாக மாநகரில் சட்டவிரோத மதுவிற்பனை, கஞ்சா, புகையிலை விற்பனை குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க துவங்கியுள்ளனர்.

தமிழகத்தில் சமீப காலமாக தாராளமாக கிடைக்கும் போதை வஸ்துகளை சிறுவர்களும், இளம் தலை முறையினரும் பயன்படுத்தி சீரழியுகின்றனர். மாநிலம் முழு வதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை, பதுக்கல் உள்ளிட்டவை கண்காணித்து நடவடி க்கை எடுத்து வருகின்றனர்.

தற்போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில், 53 பேர் இறந்தனர். 80க்கும் மேற்பட்டோர் பல்வேறு இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் எதிரொலியாக மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, போலீசார் அலட்சியமாக இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொழிலாளர் நகரமாக உள்ள திருப்பூரில் சட்டவிரோத மதுவிற்பனை, கஞ்சா, குட்கா போன்றவை சர்வ சாதாரணமாக உள்ளது. மாநகரம் மற்றும் புற நகரில் உள்ள போலீசார் இதுதொடர்பான புகார்களுக்கு தொடர் நட வடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதற்காக, பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. குட்கா விவகாரத்தில் கைது நடவடிக்கையோடு இல்லாமல், கடை களுக்கு 'சீல்', அபராதம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

3 நாளாக தொடர் ஆய்வு


கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எதிரொலியாக மாநகரம், புறநகரில் கமிஷனர், எஸ்.பி., உத்தரவின் பேரில், மூன்று நாட்களாகவே ஒவ்வொரு ஸ்டேஷன் பகுதியில் கஞ்சா, குட்கா, சட்டவிரோத மதுவிற்பனை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுவரை, சாராயம் பறிமுதல் குறித்து எந்த வழக்கும் பதியப் படவில்லை. ஆனால், குட்கா, கஞ்சா, சட்ட விரோத மது விற்பனைகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவற்றையெல்லாம் ஒழிக்க வேண்டிய கட்டாயம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், அன்றாடம் ஸ்டேஷன் நிலவரங்கள் குறித்து உளவுப்பிரிவு போலீசார் கமிஷனர், எஸ்.பி.,க்கு தகவல் அளித்து வருகின்றனர்.

இவ்விஷயத்தில் எவ்வித அலட்சியம், புகார்களுக்கு ஆளாக கூடாமல், பணியை திறம்பட செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பொதுமக்களைப் பொறுத்தவரை இனியாவது, குட்கா, கஞ்சா உள்ளிட்டவற்றை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றனர்.






      Dinamalar
      Follow us