மத துவேஷத்தை துாண்டும் பாதிரியாரின் வெறுப்பு பேச்சு; ஹிந்து அமைப்புகள் கண்டனம்
மத துவேஷத்தை துாண்டும் பாதிரியாரின் வெறுப்பு பேச்சு; ஹிந்து அமைப்புகள் கண்டனம்
UPDATED : ஜூலை 03, 2024 09:12 AM
ADDED : ஜூலை 03, 2024 07:03 AM

கோவை: கோவை சி.எஸ்.ஐ., இமானுவேல் சர்ச்சில் நடந்த கூட்டத்தில், பாதிரியாரின் வெறுப்பு பேச்சு, ஹிந்துக்களின் மத உணர்வுகளை துாண்டும் வகையில் அமைந்துள்ளதாக, கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
கோவை சி.எஸ்.ஐ., இமானுவேல் சர்ச்சில் கடந்த மாதம், 16ம் தேதி நடந்த கூட்டத்தில் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் பேசும் வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவரது பேச்சு , ஹிந்துக்களின் மத உணர்வுகளை துாண்டும் வகையில் அமைந்துள்ளதாக, கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது:
'என்ன தெரியும் கொழுக்கட்டையும், தேங்காய் மூடியையும் சாப்பிட்டு திரியுறே நீ. மாட்டு மூத்திரத்தையும் குடிச்சிட்டு திரியறே. என்னய்யா ஆன்மிகம் உங்களுக்கு. மாட்டை தின்பவன் கீழ் ஜாதி. மாட்டு மூத்திரத்தை குடிப்பவன் மேல் ஜாதி. இது எங்கையாவது வாழ்க்கையில இருக்குமா. அறிவுதான் இருக்குதா என்று தெரியல. மாட்டு சாணியை தின்பவன் மேல் ஜாதி; 'கிராஸ் பெல்ட்' அவரு!
'சாணி வருதுல, அதை தின்பவன் கீழ் ஜாதி. இது என்னவென்று தெரியவில்லை. உலகத்தில் மலத்தை தின்னும் ஒரே ஒரு இனம் இங்குதான் இருக்கிறது. உலகத்தில் எந்த இனமும் மலத்தை திங்காது. இந்தியாவில் மட்டும்தான் மலத்தை தின்று, மூத்திரத்தை குடிக்கிறான். இப்படிப்பட்ட கேவலமான ஓர் இனத்தை, இந்தியாவில் வைத்துக்கொண்டு அவன் சொல்கிறான், 'உலகில் நான் பிரம்மாவின் தலையில் இருந்து வந்தேன் என்று!'
'தலையில் இருந்து வந்தவன் எதுக்குடா கீழ இருக்குறத திங்கறே. தலையில் இருந்து வந்தவன் தலையில்தான் நிற்கணும். நாம் மாட்டின் முன்னாடி நிற்போம். இவன் மாட்டின் பின்னாடி நின்றுகொண்டு எப்படா வாலை துாக்கும் என்று பார்க்கிறான்'
இவ்வாறு, பிரின்ஸ் கால்வின் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
![]() |
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட இந்து அமைப்பினர், கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பாதிரியார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட வீடியோ தொடர்பாக, பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது, பல்வேறு பிரிவுகளின் கீழ் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை கைது செய்யப்படவில்லை.