ADDED : மே 31, 2024 04:29 AM

இந்துார் ராணி அகல்யாபாய் ஹோல்கரின் 300வது பிறந்த நாள் இன்று. அதை மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச மக்கள் கொண்டாடுகின்றனர்.
மஹாராஷ்டிர மாநிலம், அகமத் நகரில், 1725 மே 31ல் பிறந்தவர் அகல்யாபாய். தந்தை மங்கோஜி ஷிண்டே. தாய் சுசீலா. அவரின் அறிவாற்றல், சிவ பக்தி, அன்பு, மக்கள் மீது காட்டும் அக்கறை ஆகியவற்றை அறிந்த இந்துார் மன்னர் மல்ஹோரா ராவ், தன் மகன் காண்டே ராவுக்கு அகல்யாபாயை திருமணம் செய்து வைத்தார்.
கணவர் அகால மரணமடைந்ததால், இந்துார் மகாராணியாக, 1767ல் பொறுப்பேற்றார். அப்போது, மொகலாயர்களின் ஆட்சிக் காலம் என்பதால், அவர்களை எதிர்த்து போராடி, ஆட்சியை தக்கவைத்தார்.
பல்வேறு சமூக சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தினார். குழந்தை திருமணத்தை தடுத்தார்.
அவரது ஆட்சியில் அன்னிய ஆட்சியாளர்களால் இடிக்கப்பட்ட கோவில்களை சீரமைக்கப் பட்டன. சிவ பக்தையான அவர் தன் ஆட்சியையே சிவபெருமானுக்கு அர்ப்பணித்தார்.
அன்னிய ஆட்சியாளர்களால் இடிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவிலை சீரமைத்தார் ராணி அகல்யாபாய்.
அதையடுத்தே, தற்போது புதுப்பித்து கட்டப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் கோவிலில், அவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. காசி கோவில் வளாகம் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ராணி அகல்யாபாயின் வீரம், தியாகம், பக்தியை நினைவு கூர்ந்தார்
-நமது நிருபர்-.