மூடுவிழா நடத்துவார் இ.பி.எஸ்.,: மீண்டும் சொல்கிறார் தினகரன்
மூடுவிழா நடத்துவார் இ.பி.எஸ்.,: மீண்டும் சொல்கிறார் தினகரன்
ADDED : மார் 11, 2025 06:14 AM

தஞ்சாவூர் : அ.தி.மு.க., உரிமை மீட்புக் குழுவை சேர்ந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கத்தை, சசிகலா, தினகரன், திவாகரன் ஆகியோர் தனித்தனியே சந்தித்தனர்.
உடல்நிலை சரியில்லாமல், மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் சில நாட்களுக்கு முன் வீடு திரும்பினார்.
இந்நிலையில் தெலுங்கன்குடிக்காட்டில் உள்ள வைத்திலிங்கம் வீட்டுக்கு அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், ஜெயலலிதாவின் தோழி சசிகலா,அவருடைய சகோதரர் திவாகரன் ஆகியோர் தனித்தனியே சந்தித்து, உடல்நலம் விசாரித்ததோடு, தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தனர்.
சந்திப்புக்குப் பின், தினகரன் அளித்த பேட்டி:
உடல்நலம் பாதிக்கப்பட்ட வைத்திலிங்கத்தை சந்தித்து விசாரித்தேன். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் பேசினோம்.
பழனிசாமிடம் இரட்டை இலை இருந்தாலும், கட்சி பலவீனமாகி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், வரும் தேர்தலுக்குப் பின், பழனிசாமி கட்சிக்கு மூடுவிழா நடத்தி விடுவார். அதனால் தான், தேர்தலுக்கு முன்பாகவே ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வலியுறுத்துகிறோம்.
சசிகலா அளித்த பேட்டி:
நடத்தவிடாமல் செய்யவே, தி.மு.க., - எம்.பி.,க்கள் லோக்சபாவுக்கு செல்கின்றனர். இதற்கெல்லாம் வரும் 2026 சட்டசபை தேர்தலிலேயே மக்கள் பதிலடி கொடுப்பர். பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க.,வால் சரியான ஆட்சியை கொடுக்க முடியவில்லை; திணறுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.