sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

பயங்கரவாதிகள் பயிற்சி தளமாக மாறி வரும் சத்தியமங்கலம் காடு

/

பயங்கரவாதிகள் பயிற்சி தளமாக மாறி வரும் சத்தியமங்கலம் காடு

பயங்கரவாதிகள் பயிற்சி தளமாக மாறி வரும் சத்தியமங்கலம் காடு

பயங்கரவாதிகள் பயிற்சி தளமாக மாறி வரும் சத்தியமங்கலம் காடு

1


UPDATED : மே 04, 2024 03:38 AM

ADDED : மே 03, 2024 09:20 PM

Google News

UPDATED : மே 04, 2024 03:38 AM ADDED : மே 03, 2024 09:20 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பயங்கரவாதிகள் ஆயுத பயிற்சி பெறும் இடமாக, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி மாறி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளதாக, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 2022 அக்., 23ல், அதே பகுதியைச் சேர்ந்த ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின், கார் குண்டு வெடிப்பை நடத்தி பலியானார். இதுகுறித்து, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஜமேஷா முபின் கூட்டாளிகள் 14 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர் விசாரணையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில், அவர்கள் வெடிகுண்டு தயாரிப்பு மற்றும் ஆயுத பயிற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:

ஐ.எஸ்., பயங்கரவாதிகள், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியை, வெடிகுண்டு தயாரிப்பு மற்றும் ஆயுத பயிற்சிக்கான தளமாக மாற்றி உள்ளனர். அவர்கள் சதி திட்டம் தீட்ட ரகசிய கூட்டங்களையும் நடத்தி இருப்பது, எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது. அங்கு பாதுகாப்பை பலப்படுத்துவது பற்றி, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us