sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

பாசன நீரை திருடி கிணற்றில் விடுறாங்க! விவசாயிகள், அதிகாரிகள் குழு கண்டுபிடிப்பு

/

பாசன நீரை திருடி கிணற்றில் விடுறாங்க! விவசாயிகள், அதிகாரிகள் குழு கண்டுபிடிப்பு

பாசன நீரை திருடி கிணற்றில் விடுறாங்க! விவசாயிகள், அதிகாரிகள் குழு கண்டுபிடிப்பு

பாசன நீரை திருடி கிணற்றில் விடுறாங்க! விவசாயிகள், அதிகாரிகள் குழு கண்டுபிடிப்பு

4


UPDATED : செப் 07, 2024 05:44 AM

ADDED : செப் 07, 2024 04:31 AM

Google News

UPDATED : செப் 07, 2024 05:44 AM ADDED : செப் 07, 2024 04:31 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, பி.ஏ.பி., கால்வாயில் இருந்து பாசன நீரை குழாய் பொருத்தி திருடி, கிணற்றுக்கு கொண்டு செல்வதை, விவசாயிகள், அதிகாரிகள் அடங்கிய குழுவினர், கண்டறிந்தனர்.

திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையில் இருந்து கடந்த மாதம், 18ம் தேதி பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீரை பயன்படுத்தி விவசாயிகள் நிலை பயிர் மட்டுமின்றி, காய்கறி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதில், கோவை மாவட்டம், நெகமம் அருகே செட்டியக்காபாளையம், வடசித்துார் பகுதி விவசாயிகள், பாசன நீரை பயன்படுத்தி மக்காச்சோளம், தக்காளி உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடியில் ஈடுபட்டனர்.

Image 1317825
இந்நிலையில், நேற்று பி.ஏ.பி., கால்வாயில் தண்ணீர் திருட்டு நடக்கிறதா என ஆண்டிபாளையம், செட்டியக்காபாளையம், வடசித்துார் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர்கள், விவசாயிகள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் கூட்டு கண்காணிப்பு மேற்கொண்டனர்.

அப்போது, பெரியகளந்தை அருகே வடசித்துார் கிளை கால்வாய், 8.5 மீ., துாரத்தில், குழாய் அமைத்து தண்ணீர் திருட்டில் விவசாயி ஒருவர் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அங்குள்ள குழாயை அகற்றிய அதிகாரிகள், நெகமம் போலீசாரிடம், தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட விவசாயி மீது புகார் கொடுத்தனர்.

நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கால்வாய் அருகே பி.வி.சி., குழாய் அமைத்து, பாசன நீரை திருடி கிணற்றுக்கு கொண்டு செல்லப்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டது. அத்துமீறலில் ஈடுபட்டவர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, யாரும் நீர் திருட்டில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us