sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: தமிழ்நாடு பிராமண சமாஜம் வலியுறுத்தல்

/

ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: தமிழ்நாடு பிராமண சமாஜம் வலியுறுத்தல்

ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: தமிழ்நாடு பிராமண சமாஜம் வலியுறுத்தல்

ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: தமிழ்நாடு பிராமண சமாஜம் வலியுறுத்தல்

6


ADDED : செப் 02, 2024 02:06 AM

Google News

ADDED : செப் 02, 2024 02:06 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மதுரையில் நடந்த தமிழ்நாடு பிராமண சமாஜ மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மதுரையில் தமிழ்நாடு பிராமண சமாஜத்தின் மாநில பொதுக்குழு மற்றும் மாவட்ட மாநாடு, மாநில தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் தலைமையில் நடந்தது.

மாநாட்டில், 'சென்னை மாகாணமாக இருந்தபோது 1931ல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அன்று பிராமணர்கள் 30 சதவீதம் பேர் இருந்தனர்; ஆனால், இன்று 3 சதவீதம் பேர் உள்ளதாக கூறுகின்றனர்.

'சரியான எண்ணிக்கையை அறிய சமத்துவ சமுதாயம் உருவாக, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்தி, அவர்களை பாதுகாக்க, அங்கு சட்டத் திருத்தம் மேற்கொள்ள, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில், 'தினமலர்' நாளிதழ் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு, 'விப்ர ரத்னா' விருது வழங்கப்பட்டது.

அவர், 'மகாரதி தொண்டர்கள்' என்ற திட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில், ''வாழ்க்கையில் பொய், ஏமாற்றுவது போன்றவற்றில் ஈடுபடக்கூடாது. முறையாக வருமான வரி செலுத்த வேண்டும். அப்போது தான் நிம்மதியாக உறங்க முடியும்,'' என்றார்.

ஆன்மிக சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் பேசுகையில், ''பக்தியும், ஒழுக்கமும் இளமையில் வந்தால், அது காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.

''பிராமணர் என்றாலே தமிழுக்கு வேண்டாதவர்கள் என்று சிலர் கூறி வைத்துள்ளனர். இது தவறு. உ.வே.சாமிநாதய்யர் இல்லையெனில், இன்று தமிழே இல்லை.

''பிராமணர்கள் அனைவரையும் அரவணைத்து செல்பவர்கள். ஆனால், இன்று ஆரியத்தை ஒழிப்போம் என்கின்றனர். ஆரியம் என்றால் உயர்ந்தவன், உத்தமமானவன் என்று தான் பொருள்,'' என்றார்.

ராம.சீனிவாசன்,

பொதுச்செயலர், தமிழக பா.ஜ.,

மக்கள் மனநிலையை

மாற்ற பா.ஜ., சவால்!மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, முலாயம்சிங் யாதவ் போன்ற தலைவர்களின் கட்சிகள், தேசியத்தை மறுதலிக்கும் கட்சிகள் அல்ல. ஆனால், தமிழகத்தில் தி.மு.க., போன்ற கட்சிகள் தேசியத்தை நிபந்தனையுடன் ஏற்கும் கட்சிகளாகவே உள்ளன. மற்ற மாநிலங்களில் ஹிந்து மதம், ஹிந்துக்கள், தேசியம் மீது மற்ற மாநில கட்சிகளுக்கு கோபம் இல்லை. ஆனால், தி.மு.க., இவற்றை நிந்தனை செய்கிறது. இவ்வளவுக்கு பின்னும் லோக்சபா தேர்தலில் மக்கள் தி.மு.க.,வுக்கு ஓட்டளித்து உள்ளனர். மக்கள் மனநிலையை மாற்ற, பா.ஜ., சவாலாக எடுத்து செயல்படுகிறது. தற்போது, சமூக, கல்வி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீட்டை அமல்படுத்த நீதிமன்றம் வலியுறுத்தியும், தமிழகத்தில் அமல்படுத்தவில்லை. அதை, 2026ல் ஆட்சி மாறியதும் அமல்படுத்துவோம்.








      Dinamalar
      Follow us