புதுச்சேரியில் உலக தமிழ் மாநாடு ஜூலை மாதம் நடத்த முடிவு
புதுச்சேரியில் உலக தமிழ் மாநாடு ஜூலை மாதம் நடத்த முடிவு
UPDATED : மார் 02, 2025 11:14 AM
ADDED : மார் 02, 2025 06:44 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜூலை இறுதி வாரத்தில் உலக தமிழ் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்க உள்ளனர்.
புதுச்சேரியில் உலககத தமிழ் மாநாடு நடத்தப்படும் என, முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார். அதனையொட்டி, மாநாட்டுக்கான முன்னேற்பாடுகளை கலை பண்பாட்டு துறை மேற்கொண்டது. இந்நிலையில், ஜூலை மாத இறுதி வாரத்தில் 12வது உலக தமிழ் மாநாடு நடத்த புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கான இந்தியாவின் கிளை நிர்வாகிகள் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, சபாநாயகர் செல்வம், கவர்னரின் செயலர் மணிகண்டன், கலை பண்பாட்டுத் துறை செயலர் நெடுஞ்செழியன் உடனிருந்தனர்.
உலக தமிழ் மாநாட்டில் ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். மேலும், உலகம் முழுவதிலும் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.