ADDED : பிப் 05, 2024 01:08 AM

சென்னை: லோக்சபாவில் இரண்டு தொகுதிகளும், ராஜ்யசபாவில் ஒரு இடமும் ஒதுக்க வேண்டும் என, தி.மு.க.,விடம் ம.தி.மு.க., வலியுறுத்தி உள்ளது.
சென்னை அறிவாலயத்தில், லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக, தி.மு.க., - - ம.தி.மு.க., இடையே நேற்று பேச்சு நடந்தது.
தி.மு.க., சார்பில் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் நேரு, வேலு, பெரியசாமி, பொன்முடி, பன்னீர்செல்வம் மற்றும் ஆ.ராஜா ஆகியோர் பேச்சு நடத்தினர். ம.தி.மு.க., சார்பில் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், விருதுநகர், திருச்சி, தேனி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, கடலுார் என, ஆறு தொகுதிகளும், விருதுநகர், திருச்சி ஆகிய இரண்டு தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட்டும் வேண்டும் என, ம.தி.மு.க., தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட பேச்சில், கேட்கும் தொகுதிகளை எல்லாம் ஒதுக்க முடியாது என, தி.மு.க., மறுத்துள்ளது. ம.தி.மு.க., அர்ஜுனராஜ் கூறுகையில், ''இரு லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா தொகுதியும் கேட்டுள்ளோம். கண்டிப்பாக பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம்,'' என்றார்.

