sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

தீவிரமடையும் காற்று மாசு; சுவாசிக்க திணறும் தலைநகரம்

/

தீவிரமடையும் காற்று மாசு; சுவாசிக்க திணறும் தலைநகரம்

தீவிரமடையும் காற்று மாசு; சுவாசிக்க திணறும் தலைநகரம்

தீவிரமடையும் காற்று மாசு; சுவாசிக்க திணறும் தலைநகரம்

7


ADDED : டிச 19, 2025 02:25 AM

Google News

ADDED : டிச 19, 2025 02:25 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைநகர் டில்லியில் காற்றின் தரம் முன்பைவிட படுமோசமாகி இருக்கிறது. வாரத்தின் முதல் நாளில் வட மேற்கு டில்லியில் உள்ள ஜஹாங்கிரிபுரியில் காற்றின் தரக்குறியீடு, 498 என்ற மிக மோசமான அளவுக்கு பதிவாகி இருக்கிறது.

ஒப்பீட்டளவில் சொல்வதென்றால், 50க்கும் கீழாக இருந்தால் மட்டுமே சுவாசிக்க உகந்த காற்று. அப்படியென்றால், 498 என்பது எவ்வளவு மோசம் என் பதை ஊகித்துக் கொள்ளுங்கள். இதில், மிக ஆபத்தான காற்று மாசு என்பதை 'பி.எம்., 2.5' என, உலக சுகாதார அமைப்பு அழைக்கிறது.

சுவாச பிரச்னை



நுண்ணிய மாசு துகள் என்பதை தான், ஆங்கிலத்தில் பி.எம்., 2.5 என அழைக்கின்றனர். இது, கண்களுக்கு புலப்படாத ஆபத்தான மாசு துகள். தலைமுடியின் சராசரி தடிமனை விட, 40 மடங்கு சிறியது. சுவாசிக்கும் போது, மூக்கின் செயல்பாட்டால் மற்ற மாசு துகள்கள் உட்செல்வது தடுக்கப்படும். ஆனால், பி.எம்., 2.5 நுண்ணிய துகள்கள், நேராக நம் நுரையீரல் மற்றும் ரத்த ஓட்டத்தில் கலக்க கூடும்.

இதனால், சுவாச பிரச்னை, இதய கோளாறு, பக்கவாதம், நீரிழிவு உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்படக்கூடும். காற்றின் தரம் இந்த அளவுக்கு மோசமாக மாறியதால், சுவாசிக்க கூட முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர்.

சுவாச பிரச்னைகள், கண் எரிச்சல், மூச்சு திணறல் , தொண்டை எரிச்சல், இருமல், தலைவலி என பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் டில்லி மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நிலைமையை சமாளிக்க டில்லி அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்:


* பொதுமக்கள் வெளியே செல்லும்போது, 'என்95' முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும்

* குழந்தைகள், கர்ப்பிணியர், முதியோர் மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச பிரச்னைகளால் பாதிக்கப்பட்டோர், கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்

* நர்சரி முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அடுத்த அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது

* ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயில்வோர் மற்றும் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள், ஆன்லைன் மூலம் வகுப்புகளை கவனிக்கலாம். விருப்பப்பட்டால் பள்ளிக்கு வரலாம் என தளர்வு அளிக்கப்பட்டுள்ளது

அபராதம்


* மேம்படுத்தப்பட்ட அதிரடி செயல் திட்டம் - 3ன் கீழ், டில்லியில் கட்டுமானப் பணிகளுக்கு முழுதாக தடை விதிக்கப்பட்டுள்ளது

* வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக, 10,000 ரூபாய் நிவாரணத் தொகையை டில்லி அரசு செலுத்துகிறது

* அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வரவேண்டும். மீறினால் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதுடன் கடும் நடவடிக்கை பாயும்

* ஹோட்டல்கள், ரெஸ்டாரென்ட்கள், திறந்தவெளி உணவுக்கூடங்களில் தந்துாரி அடுப்புகள் பயன்படுத்த, விறகுகளை எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்குகளில் துவங்கியது 'கிடுக்கி'


மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ்கள் இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பக்கூடாது என டில்லி அரசு பிறப்பித்த உத்தரவு, நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்காக, டில்லி போலீஸ் உதவியுடன் தானியங்கி நம்பர் பிளேட் அங்கீகார கேமராக்கள், குரல் எச்சரிக்கை கருவிகள் பெட்ரோல் பங்க்குகளில் பொருத்தப்பட்டுள்ளன. விதிகளை மீறி பெட்ரோல் நிரப்ப வரும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், அனைத்து பெட்ரோல் பங்க்குகள் மற்றும் எல்லை பகுதிகளில் போக்குவரத்து துறை ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். டில்லியில் நேற்று முன்தினம் ஒரே நாளில், 31,197 வாகனங்கள் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற்றுள்ளன. இது வழக்கத்தை விட, 76 சதவீதம் அதிகம். பி.எஸ்., - 6 கார்பன் உமிழ்வு தரத்திற்கு கீழே உள்ள பிற மாநில தனியார் வாகனங்கள், டில்லிக்குள் நுழைவது தடை செய்யப்பட்டு உள்ளது. கட்டுமான பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களும் டில்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.



சட்ட சிக்கலால் பதறும் டீலர்கள்


மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு எரி பொருள் நிரப்பக்கூடாது என்ற அரசின் உத்தரவை அமல்படுத்துவதில், சில சவால்கள் இருப்பதாக டில்லி பெட்ரோல் டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சவால்கள் குறித்து சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்ஸாவிடமும் எடுத்துரைக்கப் பட்டுள்ளது. இது குறித்து டில்லி பெட்ரோல் டீலர்கள் சங்கம் கூறியதாவது: காற்று மாசை குறைப்பதற்காக டில்லி அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு தருகிறோம். அதே சமயம், அரசின் உத்தரவை அமல்படுத்த வேண்டு மெனில் சில அசாதாரணமான நடவடிக்கைகள் அவசியம். அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் அடிப்படையில், சில்லரை வணிகத்தில் அத்தியாவசிய பொருட்களை விற்க மறுப்பது கிரிமினல் குற்றம். இதனால், சட்ட சிக்கல்களுக்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஆளாக நேரிடும். எனவே, சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். வாகனங்களின் கார்பன் உமிழ்வு பரிசோதனை முறையை மேம்படுத்த வேண்டும். அதற்கான கருவிகள் வழங்கப்பட வேண்டும். இந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டால் மட்டுமே அரசின் உத்தரவை வெற்றிகரமாக அமல்படுத்துவது சாத்தியமாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



- நமது சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us