sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

அஜித் தோவல்..! அன்று மீடியேட்டர்; இன்று டெர்மினேட்டர்

/

அஜித் தோவல்..! அன்று மீடியேட்டர்; இன்று டெர்மினேட்டர்

அஜித் தோவல்..! அன்று மீடியேட்டர்; இன்று டெர்மினேட்டர்

அஜித் தோவல்..! அன்று மீடியேட்டர்; இன்று டெர்மினேட்டர்

5


ADDED : மே 09, 2025 06:15 AM

Google News

ADDED : மே 09, 2025 06:15 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த 1999ம் ஆண்டு, டிச.,24ல் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து டில்லி புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், 'ஹர்கத் உல் முஜாகிதீன்' அமைப்பைச் சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. விமானத்தில், 179 பயணியர் மற்றும் 11 பணியாளர்கள் இருந்தனர்.

விமானத்தை கடத்திய பயங்கரவாதிகள், நேபாளத்துக்கு தேனிலவுக்கு சென்ற பயணி ஒருவரை குத்திக் கொன்றனர். கடத்தப்பட்ட விமானம், அமிர்தசரஸ், லாகூர், துபாய் என வட்டமடித்து பின்னர் தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹாருக்கு சென்றது.

பணயக்கைதிகளாக இருந்த விமான பயணியரை காப்பாற்ற வேண்டும் எனில், அதற்கு ஈடாக, இந்திய சிறையில் இருக்கும் மூன்று பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. அவ்வாறு விடுவிக்கப்பட்ட கைதிகளில் ஒருவன் தான், இந்த மசூத் அசார்.

இந்த சம்பவத்தில் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய மீடியேட்டர்கள் (நடுவர்கள்) மூவரில் ஒருவர் 'ரா' உளவு அமைப்பில் இருந்த ஐ.பி.எஸ்., அதிகாரி அஜித் தோவல். அவர் தான் தற்போது, பயங்கரவாதிகளை அழித்தொழிக்கும் இந்தியாவின் ஆபரேஷன் சிந்துார் தாக்குதலிலும், முக்கிய பங்கு வகிக்கிறார்.






      Dinamalar
      Follow us