sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

நீட் விலக்கு தந்தால்தான் பா.ஜ.,வுடன் கூட்டணி என அறிவிக்க தயாரா? பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்

/

நீட் விலக்கு தந்தால்தான் பா.ஜ.,வுடன் கூட்டணி என அறிவிக்க தயாரா? பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்

நீட் விலக்கு தந்தால்தான் பா.ஜ.,வுடன் கூட்டணி என அறிவிக்க தயாரா? பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்

நீட் விலக்கு தந்தால்தான் பா.ஜ.,வுடன் கூட்டணி என அறிவிக்க தயாரா? பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்

34


ADDED : ஏப் 06, 2025 11:47 PM

Google News

ADDED : ஏப் 06, 2025 11:47 PM

34


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: “பா.ஜ.,வுடன் கூட்டணிக்கு போவதற்கு முன், 'நீட்' விலக்கு தந்தால் தான் கூட்டணி என, வெளிப்படையாக பழனிசாமி அறிவிக்கத் தயாரா?” என, முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்தார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில், 494 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

கணக்கெடுப்பு


தொடர்ந்து, ஊட்டி அரசு கலை கல்லுாரி மைதானத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது:

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில், மிகப்பெரிய சதி நடக்க இருப்பதை முதன்முதலில் உணர்ந்து, மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்த மாநிலம் தமிழகம் தான். வர உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மேற்கொள்ள உள்ள தொகுதி மறுசீரமைப்பு, நம்மை போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கும்.

தமிழக மண்ணில் ராமேஸ்வரம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, தொகுதி மறுசீரமைப்பால் தமிழக மக்களுக்கு ஏற்படும் நியாயமான அச்சத்தை போக்க வேண்டும்.

லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை குறையாது என்பதை அறிவிக்க வேண்டும். வக்ப் திருத்த சட்டம் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, 'பா.ஜ.,வுடன் கூட்டணி உள்ளது; இல்லை' என்று மாற்றி, மாற்றி பேசுகிறார். உங்களுக்கு நான் ஒரு சவால் விடுகிறேன்.

தமிழக மாணவர்கள் மீது உங்களுக்கு துளியாவது அக்கறை இருந்தால், பா.ஜ.,வுடன் கூட்டணிக்கு போவதற்கு முன், 'நீட் விலக்கு தந்தால் தான் கூட்டணி' என்று வெளிப்படையாக அறிவிக்க முடியுமா, என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

புதிய வளர்ச்சி திட்டம்


முன்னதாக, 494 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிந்த 1,703 பணிகளை துவக்கி வைத்தார். 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 56 புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 15,000 பயனாளிகளுக்கு, 102 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வேலு, சுப்பிரமணியன், சாமிநாதன், அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், ராஜா எம்.பி., மற்றும் அரசு துறை செயலர் செந்தில்குமார், கலெக்டர் லட்சுமி பவ்யா உட்பட பலர் பங்கேற்றனர்.

கார் பார்க்கிங்'

ஊட்டியில், முதல்வர் அறிவித்த ஆறு திட்டங்களின் விபரம்:நீலகிரியில் சொந்தமாக வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்காக, கூடலுாரில், 26.6 கோடி ரூபாய் செலவில், 300 வீடுகள் கொண்ட புதிய கலைஞர் நகர் அமைக்கப்படும்பழங்குடியின மக்களின் வாழ்வியலை எல்லோரும் தெரிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தி, ஆராய்ச்சிகளை மேற்கொள்ள, 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 'பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம்' அமைக்கப்படும்நீலகிரியில், இயற்கை அழகை சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்க, 'எங்கும் ஏறலாம் - எங்கும் இறங்கலாம்' என்ற சுற்றுலா திட்டம், 5 கோடி ரூபாய் செலவில், 10 புதிய பஸ்களுடன் துவங்கப்படும்ஊட்டியில், சுற்றுலா காலங்களில் ஏற்பட கூடிய போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு, 20 கோடி ரூபாய் செலவில், 'மல்ட்டி லெவல் கார் பார்க்கிங்' வசதி ஏற்படுத்தப்படும் நாடுகாணியில், மரபணு தொகுதி சூழலியல் இயற்கை சுற்றுலா மையம், 3 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில், 5.75 கோடி ரூபாய் செலவில், 23 சமுதாய கூடங்களும், நகர்ப்புற பகுதிகளில் வாழும் பழங்குடியினருக்கு, 10 கோடி ரூபாய் செலவில் 200 வீடுகளும் கட்டி தரப்படும்.



அதிகாரிகளுடன் தோடர்கள் வாக்குவாதம்

ஊட்டியில் புதிய மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த நிகழ்ச்சியின் போது, தோடர் பழங்குடியினரின் பாரம்பரிய நடனம் இடம்பெற்றது. அதன்பின், மருத்துவமனை வார்டுகளை பார்வையிட முதல்வர் உள்ளே சென்றார். அப்போது, 'நீலகிரி பழங்குடி மக்களின் குறைகள் மற்றும் மாவட்டத்தின் அடிப்படை பிரச்னைகள் குறித்த மனுவை முதல்வரிடம் அளிக்க அனுமதிக்க வேண்டும்' என, அதிகாரிகளிடம், தோடர் இன நிர்வாகிகள் கேட்டனர். அதிகாரிகள், 'முதல்வரை சந்திக்க அனுமதியில்லை' என்றனர். இதனால், நீலகிரி தோடர் சங்கத்தினர், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலறிந்த முதல்வர், நேரடியாக வந்து மனுவை பெற்று, பழங்குடியினரின் ஓவியத்தையும் பெற்றுச் சென்றார்.








      Dinamalar
      Follow us