sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

 'தாமரை' சின்னத்தில் போட்டியிடுமாறு கூட்டணி கட்சிகளை வலியுறுத்தும் பா.ஜ.,

/

 'தாமரை' சின்னத்தில் போட்டியிடுமாறு கூட்டணி கட்சிகளை வலியுறுத்தும் பா.ஜ.,

 'தாமரை' சின்னத்தில் போட்டியிடுமாறு கூட்டணி கட்சிகளை வலியுறுத்தும் பா.ஜ.,

 'தாமரை' சின்னத்தில் போட்டியிடுமாறு கூட்டணி கட்சிகளை வலியுறுத்தும் பா.ஜ.,

3


UPDATED : பிப் 24, 2026 05:55 AM

ADDED : பிப் 24, 2026 05:20 AM

Google News

3

UPDATED : பிப் 24, 2026 05:55 AM ADDED : பிப் 24, 2026 05:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிறிய கட்சிகளை, தங்களின் தாமரை சின்னத்தில் போட்டியிடுமாறு பா.ஜ., தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., - த.மா.கா., - புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணியில், 40 தொகுதிகளில் போட்டியிட பா.ஜ., முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக ஏற்கனவே அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம், பா.ஜ., நிர்வாகிகள் பேச்சு நடத்தியுள்ளனர். அப்போது, 'புதிய கட்சிகள் கூட்டணிக்குள் வர இருப்பதால், பா.ஜ.,வுக்கு 25 - 30 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கீடு செய்ய முடியும்' என பழனிசாமி தெரிவித்தார்.

அந்த சமயத்தில், கூட்டணியில் தே.மு.தி.க., இணையும் என்று அ.தி.மு.க., எதிர்பார்த்தது. ஆனால், தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்து விட்டது. இனி புதிய கட்சிகள் சேர வாய்ப்பு குறைவு என்பதால், அ.தி.மு.க., வசம் அதிக தொகுதிகள் உள்ளன. இதனால், பா.ஜ., முன்னர் எதிர்பார்த்தபடியே, 40 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும், கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கு, 10 - 15 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது. இந்த தேர்தலில், 50 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று பா.ஜ., மேலிட தலைவர்கள் விருப்பம் காட்டுகிகின்றனர். அதனால், சிறிய கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால், 50 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ., தரப்பில் களமிறங்க வாய்ப்பு கிடைக்கும்.

இது தொடர்பாக, புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோரை கடந்த வாரம் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.

அப்போது, தாமரை சின்னத்தில் போட்டியிடுமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால், அவர்கள் தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட விரும்புவதால், பா.ஜ., தரப்பு குழப்பம் அடைந்து உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.






      Dinamalar
      Follow us