தமிழகத்தில் 3 ரயில்வே திட்டங்கள்: சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 3 ரயில்வே திட்டங்கள்: சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு வாய்ப்பு
ADDED : செப் 10, 2026 06:30 AM

புதுடில்லி: தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், 10,021 கோடி ரூபாய் மதிப்பிலான ஐந்து ரயில்வே திட்டங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ரயில்வே துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், 'பி.எம்., கதி சக்தி' திட்டத்தின் கீழ் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் கூடுதல் ரயில் பாதைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில், மொத்தம் 540 கி.மீ., துாரத்துக்கு 10,021 கோடி ரூபாய் செலவில் ஐந்து திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களின் வாயிலாக, நிலக்கரி, சிமென்ட், இரும்பு, உணவு தானியங்கள் மற்றும் வாகனம் உள்ளிட்ட சரக்குகளை எடுத்து செல்வது எளிதாகும். ஆண்டுக்கு 4.70 டன் கூடுதல் சரக்கு கையாளப்படும். மேலும், பயண நேரம் கணிசமாக குறைவதோடு, கிட்டத்தட்ட 2,121 கிராமங்களை சேர்ந்த 52 லட்சம் மக்கள் இதன் வாயிலாக நேரடியாக பயனடைவர் என அரசு தெரிவித்துள்ளது.
