sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

 விஜய் விழாவில் கிறிஸ்துவ பிரமுகர்கள் பங்கேற்பு; பதிலடியாக முதல்வருடன் பாதிரியார்கள் சந்திப்பு

/

 விஜய் விழாவில் கிறிஸ்துவ பிரமுகர்கள் பங்கேற்பு; பதிலடியாக முதல்வருடன் பாதிரியார்கள் சந்திப்பு

 விஜய் விழாவில் கிறிஸ்துவ பிரமுகர்கள் பங்கேற்பு; பதிலடியாக முதல்வருடன் பாதிரியார்கள் சந்திப்பு

 விஜய் விழாவில் கிறிஸ்துவ பிரமுகர்கள் பங்கேற்பு; பதிலடியாக முதல்வருடன் பாதிரியார்கள் சந்திப்பு

5


UPDATED : டிச 23, 2025 05:28 AM

ADDED : டிச 23, 2025 05:21 AM

Google News

5

UPDATED : டிச 23, 2025 05:28 AM ADDED : டிச 23, 2025 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: த.வெ.க., நடத்திய கிறிஸ்துமஸ் விழாவில், முக்கிய பிரமுகர்களை அழைத்து வந்து, விஜய் பலத்தை காட்டியதால், தி.மு.க., தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.

தமிழகத்தில் சிறுபான்மையினர் ஓட்டுகள் 13 சதவீதம் உள்ளன. இவற்றில் கிறிஸ்தவர்கள் ஓட்டுகள் 6 சதவீதம் உள்ளன. ஜெயலலிதா மறைவிற்கு பின், முஸ்லிம், கிறிஸ்துவர்கள் ஓட்டுகள், தி.மு.க.,விற்கு முழுமையாக கிடைத்து வருகின்றன.

இதன் காரணமாக, தி.மு.க., கூட்டணி சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் என தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது.

வரும் சட்டசபை தேர்தலிலும் சிறுபான்மையினர் ஓட்டுகளை தக்கவைக்க, தி.மு.க., தலைமை தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

ஆனால், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கிறிஸ்துவர் என்பதால், அந்த மதத்தினரின் ஓட்டுகள் கைமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. விஜய்க்கு பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகள் மறைமுக ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், த.வெ.க., சார்பில், மாமல்லபுரத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நேற்று நடந்தது. இதில், முக்கிய கிறிஸ்துவ அமைப்புகளைச் சேர்ந்த பேராயர்கள், கிறிஸ்துவ கல்வி நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர். பலர் வெளிப்படையாகவே, சட்டசபை தேர்தலில் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசினர்.

இப்படி விஜய் நடத்திய கிறிஸ்துமஸ் விழா நடந்ததால், அதிர்ச்சி அடைந்த தி.மு.க., தரப்பு, அதற்கு போட்டியாக பாதிரியார்களை அழைத்து வந்து, முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வைத்தனர்.

சென்னை தலைமை செயலகத்தில், தென்னிந்திய திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார் ரூபன் மார்க், சி.எஸ்.ஐ., பாதிரியார் ஹேமசந்திரா, வேலுார், மதுரை, ஈரோடு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பாதிரியார்கள் உள்ளிட்டோர், நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர்.

பெண்கள், குழந்தைகளுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு த.வெ.க., நடத்திய கிறிஸ்துமஸ் விழாவில், ஆற்காடு இளவரசர் மகனும், திவானுமான நவாப் ஜாதா முகமது ஆசிப் அலி பேசியதாவது: நான் முஸ்லிம் மதத்தைப் பின்பற்றுகிறேன். என் மூத்த மகனுக்கு ஆபிரகாம் என்றும், இளைய மகனுக்கு ஜீசஸ் என்றும் பெயர் சூட்டியுள்ளேன். விஜய்க்கு போதுமான பணம், புகழ் உள்ளது. இருந்தும், மக்கள் சேவை செய்வதற்காக அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு மிகப்பெரிய இளைஞர் பலம் இருக்கிறது. ஒவ்வொரு மதமும் ஒன்றுக்கொன்று வேறுபட்டது. ஆனால், அவை அனைத்தும் மனிதத் தன்மையை போதிக்கின்றன. ஹிந்து, கிறிஸ்துவம், முஸ்லிம் என, பாகுபாடு இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தமிழகத்தில் அமைதி நிலவுகிறது. தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளனர். நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரம் உள்ள மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. இவ்வாறு அவர் பேசினார். ***





எவ்வளவு பெரிய எதிரியையும் ஜெயிக்கலாம் பைபிள் கதை சொல்லி நம்பிக்கையூட்டும் விஜய்


த.வெ.க., சார்பில் நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவில், விஜய் பேசியதாவது: பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்று எல்லா பண்டிகைகளையும் எல்லாரும் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டாடும் மாநிலம் தமிழகம். இங்கு, வாழ்க்கை முறையும், வழிபாடு முறையும் வேறு வேறு என்றாலும், எல்லாரும் சகோதரர்கள் தான். உண்மையான நம்பிக்கைதான் நல்லிணக்கத்தை விதைக்கும். மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்க சொல்லி தரும். அப்படிபட்ட நம்பிக்கை இருந்தால், எப்போதும் எப்பேர்பட்ட பிரச்னைகளையும் ஜெயிக்கலாம். அப்படிபட்ட நம்பிக்கையின் வலிமையை பற்றி சொல்வதற்கு, பைபிளில் நிறைய கதைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை பற்றி மட்டும் சொல்கிறேன். ஒரு இளைஞனுக்கு எதிராக, அவரது சொந்த சகோதரர்கள் பொறாமைப்பட்டு, அவரை பாழுங்கிணற்றில் தள்ளி விட்டனர். அதில் இருந்து அவன் மீண்டு வந்து, நாட்டுக்கு அரசனாகி, தனக்கு துரோகம் செய்த சகோதரர்களை மட்டுமல்ல; நாட்டையே எப்படி காப்பாற்றினான் என பைபிளில் சொல்லப்பட்டு உள்ளது. அந்த கதை, யாரை பற்றிய கதை என்று, நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. கடவுள் அருள், மக்களை மானசீகமாக நேசிக்கும் அன்பு, அதீத வலிமை, அதற்கான உழைப்பு இருந்தால் போதும்; எவ்வளவு பெரிய எதிரிகளையும் ஜெயிக்கலாம். சமூக, சமய நல்லிணக்கத்தை பாதுகாப்பதில், 100 சதவீதம் உறுதியாக இருக்கிறோம். அதில் எந்தவிதமான சமாதானமும் இருக்காது. கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும்; அது நம்மை வழி நடத்தும். இவ்வாறு விஜய் பேசினார்.








      Dinamalar
      Follow us