sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்: சோடங்கருக்கு காங்கிரசார் அழுத்தம்

/

ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்: சோடங்கருக்கு காங்கிரசார் அழுத்தம்

ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்: சோடங்கருக்கு காங்கிரசார் அழுத்தம்

ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்: சோடங்கருக்கு காங்கிரசார் அழுத்தம்

5


ADDED : மே 17, 2025 03:21 AM

Google News

ADDED : மே 17, 2025 03:21 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.மு.க.,வுடன் கூட்டணி உடன்பாடு செய்வதற்கு முன், ஆட்சியில் பங்கு குறித்து பேச வேண்டும்' என, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரிடம், தமிழக காங்., நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில், இரண்டாவது நாளாக நேற்று, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக காங்கிரஸ் பொதுச்செயலர் இல.பாஸ்கரன் கூறியுள்ளதாவது:

கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கும், அ.தி.மு.க., கூட்டணிக்கும், ஒன்றரை சதவீதம் தான் ஓட்டு வித்தியாசம். வலுவான கூட்டணி அமைந்தால் தான் தி.மு.க.,வால் ஆட்சி அமைக்க முடியும்.

தமிழகத்தில் காங்கிரஸ் இனி, அரசியல் செய்ய வேண்டும் என்றால், அதிகார பகிர்வு வேண்டும். அதனால், ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்.

தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு நடத்தும்போது, ஆட்சியில் பங்கு குறித்து உறுதி செய்த பின்னரே, ஒப்பந்தம் செய்ய வேண்டும். இது அடிமட்ட தொண்டர்களின் கருத்து. தொண்டர்களின் மன உணர்வை ராகுலிடம் கிரிஷ் சோடங்கர் தான் வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

நேற்று முன்தினம் கிரிஷ் சோடங்கர் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு, 24 துணை அமைப்புகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடப்பட்டது.

மகளிர் அணி தலைவி ஹசீனா சையது, மாணவரணி தலைவர் சின்னதம்பி உட்பட, 20 அணிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால், மீனவர் அணி தலைவர் ஜோர்தான், விவசாய அணி தலைவர் பவன்குமார் உட்பட, 4 பேர் மட்டும் பங்கேற்கவில்லை.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us