sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

தி.மு.க., பற்றி அடக்கிவாசிப்பு; முதல்வர் சந்திப்புக்கு பின் சீமான் பேச்சில் மாற்றம்

/

தி.மு.க., பற்றி அடக்கிவாசிப்பு; முதல்வர் சந்திப்புக்கு பின் சீமான் பேச்சில் மாற்றம்

தி.மு.க., பற்றி அடக்கிவாசிப்பு; முதல்வர் சந்திப்புக்கு பின் சீமான் பேச்சில் மாற்றம்

தி.மு.க., பற்றி அடக்கிவாசிப்பு; முதல்வர் சந்திப்புக்கு பின் சீமான் பேச்சில் மாற்றம்

19


ADDED : ஆக 21, 2025 04:32 AM

Google News

ADDED : ஆக 21, 2025 04:32 AM

19


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பின், த.வெ.க., தலைவர் விஜயை குறிவைத்து, கடுமையாக தாக்கி பேசி வருகிறார். அதேநேரம், தி.மு.க., குறித்த பேச்சில் கடும் சொற்களை தவிர்த்து வருகிறார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அறிக்கை, மேடை பேச்சு, பத்திரிகையாளர்கள் சந்திப்பில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் தி.மு.க.,வினர் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து வந்தார். குறிப்பாக, ஈ.வெ.ரா.,வுக்கு எதிராகவும், தி.மு.க.,வுக்கு எதிராகவும் சீமான் பேசி வந்தார்.

இந்த பேச்சுக்கு அரசியல் வட்டாரத்தில் ஆதரவும், எதிர்ப்பும் காணப்பட்டது. தி.மு.க., மற்றும் ஈ.வெ.ரா., குறித்து சீமான் தொடர்ந்து பேசியதால், அது பிடிக்காத அவரது கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் சிலர் விலகி, தி.மு.க.,விலும், இதர கட்சிகளிலும் சேர்ந்தனர்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் மு.க.முத்து மறைவு குறித்து விசாரிக்க, கடந்த மாதம் முதல்வரை, அவரது இல்லத்தில் சீமான் சந்தித்து பேசினார். 'இந்த சந்திப்பு, அரசியலுக்கு அப்பாற்பட்ட அன்பு' என சீமான் தெரிவித்து இருந்தார்.

ஆனால், அதன்பின்னர் சீமானின் அரசியல் நடவடிக்கைகளில் மாற்றம் தென்படத் துவங்கிவிட்டது. அறிக்கைகள், மேடை பேச்சு, பத்திரிகையாளர்கள் சந்திப்பில், முதல்வர் மற்றும் தி.மு.க.,வினரை சீமான் விமர்சித்தாலும், கடும் சொற்களை தவிர்த்து வருகிறார்; பழைய ஆக்ரோஷமான குற்றச்சாட்டுகள் இல்லை.

நாம் தமிழர் கட்சி, வரும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டால், தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், சீமானின் இந்த திடீர் மாற்றம், தி.மு.க.,வுக்கு லாபகரமானதாக இருக்கும் என அக்கட்சியினர் கூற துவங்கி உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, தனித்து போட்டியிட வேண்டும் என்பதில், தான் உறுதியாக இருப்பதாக சீமான் சொல்லி வருவதும், தி.மு.க.,வினரிடம் கடும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் தான், தி.மு.க., மீதான மோதலை குறைத்து, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சித் தொண்டர்களை கடுமையாக, சீமான் மேடை தோறும் விமர்சிக்கத் துவங்கியுள்ளார். இந்த மாற்றத்தால், நா.த.க., - த.வெ.க., தொண்டர்கள், சமூக வலைதளங்களில் அநாகரிகமான சொற்களை பயன்படுத்தி, வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து, நா.த.க.,வினர் கூறியதாவது:


எல்லாரையும் ஒரே மாதிரியாகத்தான் விமர்சிக்கிறார் சீமான். விஜயின் செயல்பாடுகள் விமர்சிக்கும்படியாக உள்ளதால், அவரையும் விமர்சிக்கிறார். இது தனிப்பட்ட மோதல் இல்லை; கொள்கை அடிப்படையிலான அரசியல் மோதல். விஜய் கட்சியினரும் நாம் தமிழர் தொண்டர்களை விமர்சிக்கின்றனர். அக்கட்சியின் செயல்பாடுகளை பொறுத்து, நாம் தமிழர் கட்சியின் செயல்பாடும் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us