sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

சட்டசபையில் முதல்வருடன் விவாதம்; இ.பி.எஸ்., இரண்டு நாள் ஒத்திகை

/

சட்டசபையில் முதல்வருடன் விவாதம்; இ.பி.எஸ்., இரண்டு நாள் ஒத்திகை

சட்டசபையில் முதல்வருடன் விவாதம்; இ.பி.எஸ்., இரண்டு நாள் ஒத்திகை

சட்டசபையில் முதல்வருடன் விவாதம்; இ.பி.எஸ்., இரண்டு நாள் ஒத்திகை


ADDED : ஏப் 28, 2025 05:44 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் வசமுள்ள துறைகளின், மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்க உள்ளது.

இதில், சட்டம் -ஒழுங்கு பிரச்னை உட்பட பல்வேறு மக்கள் பிரச்னைகளை, புள்ளி விபரங்களுடன் எடுத்துரைக்க, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி இரண்டு நாட்களாக தயாரானதுடன், ஒத்திகை பார்த்துள்ளார்.

சட்டசபையில் மார்ச் 14ம் தேதி பொது பட்ஜெட், 15ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. அதன்பின் பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. மார்ச் 24 முதல், துறைகளுக்கான மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்து வருகிறது.

நாளை சட்டசபை கூட்டத் தொடர் நிறைவடைய உள்ள நிலையில், இன்று காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்க உள்ளது.

இவ்விரண்டு துறைகளும், முதல்வர் ஸ்டாலின் வசம் உள்ளன. எனவே, இன்றைய மானிய கோரிக்கையில், சட்டசபை கட்சி தலைவர்கள் அனைவரும் பேச அனுமதிக்கப்படுவர்.

இறுதியாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசுவார். அதற்காக, இன்று கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று சட்டசபை கூடியதும், எட்டு சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. அதன்பின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்கும்.

இன்றைய விவாதத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி, தமிழக சட்டம் - ஒழுங்கு பிரச்னை, டாஸ்மாக் ஊழல், அமைச்சர்கள் மீதான வழக்குகள், போதைப் பொருட்கள் நடமாட்டம், அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் போன்றவற்றை சட்டசபையில் எழுப்ப திட்டமிட்டு உள்ளார்.

இதற்காக, கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்த பெரிய அளவிலான கொலைகள், கொள்ளைகள், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஆகியவை குறித்த பட்டியலை தயார் செய்துள்ளார்.

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி குறித்தும், அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த சம்பவங்கள் குறித்தும் முதல்வர் குறிப்பிட்டு பேசினால், அதற்கு அளிக்க வேண்டிய பதில்களையும் தயார் செய்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக, சட்டசபையில் பேச வேண்டிய விஷயங்கள் குறித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள், அரசியல் விமர்சகர்கள், செய்தியாளர்கள் ஆகியோருடன் கலந்து பேசி உள்ளார்.

சட்டசபையில் பேச தயார் செய்த விஷயங்களை, சட்டசபையில் எடுத்து பேசுவது குறித்து ஒத்திகையும் பார்த்து உள்ளார்.

அதேபோல், எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க, முதல்வரும், அமைச்சர்களும் தயாராகி உள்ளனர்.

எனவே, இன்று சட்டசபையில் சூடு பறக்கும் விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us