டில்லி உஷ்ஷ்ஷ்: தமிழிசையை அடுத்து..ஒடிசா கவர்னர் ரகுபீர் தாஸ்
டில்லி உஷ்ஷ்ஷ்: தமிழிசையை அடுத்து..ஒடிசா கவர்னர் ரகுபீர் தாஸ்
UPDATED : அக் 06, 2024 06:40 AM
ADDED : அக் 06, 2024 02:29 AM

புதுடில்லி: கவர்னர்கள் பதவியைத் துறந்து, தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவது, தற்போது வழக்கமாகி விட்டது. தெலுங்கானா கவர்னராக பதவியில் இருந்த தமிழிசை, லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது, மற்றொரு கவர்னரும் பதவி விலகி, அரசியலில் ஈடுபட தயாராகி வருகிறார்.
அவர் ஒடிசா கவர்னர் ரகுபீர் தாஸ்; இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, ஜார்க்கண்ட் பா.ஜ.,வின் பொறுப்பாளராக உள்ளார். இவரும், ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜியும், கவர்னர் தாஸை சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும், ரகுபீர் தாஸை சந்தித்துள்ளார்.
'இதையெல்லாம் பார்க்கும்போது, ரகுபீர் தாஸ் நிச்சயம் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தீவிர அரசியலுக்கு வருவார்' என்கின்றனர்.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர்-, டிசம்பரில் நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட் மற்றும் மஹாராஷ்டிரா மாநில தேர்தல் தேதிகளை, தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. ஜாம்ஷெட்பூர் லோக்சபா தொகுதியை, ஐந்து முறை தொடர்ச்சியாக வென்றவர், தாஸ். கடந்த 2019ல், பா.ஜ., அதிருப்தியாளரிடம் 15,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
'ஜார்க்கண்டில் பவர் சென்டராக இருந்த ரகுபீர் தாஸ், மீண்டும் அரசியலுக்கு வருவது நிச்சயம்' என, பா.ஜ.,வில் சொல்லப்படுகிறது.