sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

தி.மு.க., - அ.தி.மு.க., ரகசிய வியூகம்: வளரும் பா.ஜ.,வை வீழ்த்தும் திட்டமா?

/

தி.மு.க., - அ.தி.மு.க., ரகசிய வியூகம்: வளரும் பா.ஜ.,வை வீழ்த்தும் திட்டமா?

தி.மு.க., - அ.தி.மு.க., ரகசிய வியூகம்: வளரும் பா.ஜ.,வை வீழ்த்தும் திட்டமா?

தி.மு.க., - அ.தி.மு.க., ரகசிய வியூகம்: வளரும் பா.ஜ.,வை வீழ்த்தும் திட்டமா?


ADDED : பிப் 15, 2024 12:40 AM

Google News

ADDED : பிப் 15, 2024 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சியை தடுக்க தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் ரகசிய வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி, அ.தி.மு.க., பொதுசெயலராகி உள்ள பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை, முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு வழங்கினார். ஆனாலும், சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை பன்னீர்செல்வத்திற்கே வழங்கப்பட்டது. அதை உதயகுமாருக்கு ஒதுக்கக் கோரி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக அ.தி.மு.க., போராடியது.

இந்நிலையில் திடீரென, 'அ.தி.மு.க.,வின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேச, அடுத்த நாளே, உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஒதுக்கப்பட்டது. இது, அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வின் இடத்தைப் பிடிக்க பா.ஜ., முயற்சிப்பதாக, தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி., உள்ளிட்ட கட்சிகள் வெளிப்படையாகவே பேசி வருகின்றன.

தடுக்க வேண்டும்


கடந்த 2021ல் தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின், அ.தி.மு.க., - - பா.ஜ., உறவு மோசமடைந்தது கடந்த 2022 பிப்ரவரியில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பா.ஜ., தனித்தே போட்டியிட்டது.

அதன்பிறகு, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, 'தி.மு.க., அரசை ஒரு கட்டத்திற்கு மேல் விமர்சிக்க முடியாது. உங்கள் இடத்திற்கு அதாவது ஆளுங்கட்சி வரிசைக்கு நாங்கள் வர வேண்டும். எதிர்க்கட்சி வரிசைக்கு நீங்கள் வர வேண்டும். வேறு சக்திகள் வருவதை தடுக்க வேண்டும்.

சொல்லப் போனால், நமக்குள் நடப்பதெல்லாம் பங்காளி சண்டைதான்' என்று சட்டசபையிலும், வெளியிலும் பேசினார்.

அதாவது, எக்காரணம் கொண்டும், இரு கட்சிகளுக்கும் இடையே பா.ஜ., வளர்ந்துவிடக் கூடாது என்பதுதான் அவருடைய பேச்சின் சாராம்சம்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும், 'தமிழகத்தை தி.மு.க., ஆள வேண்டும் அல்லது அ.தி.மு.க., ஆள வேண்டும். மற்றவர்களை அனுமதிக்கக்கூடாது' என, சட்டசபையில் பேசினார்.

இந்நிலையில், தமிழக அரசியலில் இரண்டாவது இடத்தை, பா.ஜ., பிடித்துவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு விஷயங்களில், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் இணைந்து செயல்படுவதாகவும், அதனால்தான் பழனிசாமி மற்றும் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள், கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளில், ஆரம்பத்தில் காட்டப்பட்ட வேகம் இப்போது இல்லை என்றும் கூறப்படுகிறது.

உக்கிரமான போராட்டம்


இது தொடர்பாக, அ.தி.மு.க., - தி.மு.க., இரண்டையும் எதிர்க்கும் சிலர் கூறியதாவது:

நடப்பு சட்டசபை கூட்டத் தொடரில், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்னைகளில், அ.தி.மு.க., கேள்விகள் எழுப்ப, அதற்கு முதல்வர், அமைச்சர்கள் பதிலளித்தும், அ.தி.மு.க.,வினர் அமைதியாக அமர்ந்தும் விடுகின்றனர்.

அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆர்., குறித்து, தி.மு.க., துணைப் பொதுச்செயலர் ஆ.ராஜா மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். ஜெயலலிதா இருந்திருந்தால் ஆ.ராஜா மன்னிப்பு கேட்கும் வரை உக்கிரமாக போராட்டங்கள் நடந்திருக்கும்.

ஆனால், பெயரளவுக்கு ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்திவிட்டு, விஷயத்தை அப்படியே முடித்து விட்டார் பழனிசாமி.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஸ்டாலின் -- பழனிசாமி ரகசிய உடன்பாடு?


இது தொடர்பாக, தமிழகஅரசியல் களத்தை மிக உன்னிப்பாக நோக்கும் காமராஜர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர்தமிழருவி மணியன் கூறியதாவது:தி.மு.க.,வை 'தீய சக்தி' என்றார் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஒருபடி மேலே போய், கருணாநிதியை 'திருக்குவளை தீயசக்தி' என்றார். அந்த இரு தலைவர்களும் இறக்கும் வரை, தி.மு.க.,வுடன் இணக்கம் கொள்ளவில்லை. எந்த இடத்திலும், அ.தி.மு.க., தி.மு.க.,வோடு சமரசம் கொள்ளவில்லை.
தி.மு.க.,வை எதிர்க்க பிறந்தது தான் அ.தி.மு.க., எனவே, தி.மு.க.,வுக்கு எதிரான நடவடிக்கையில் இருந்து எப்போது விலகுகிறதோ, அப்போதே அ.தி.மு.க., அரசியல் ரீதியான அர்த்தத்தை இழந்து விடும். தி.மு.க.,வை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட அந்த இயக்கத்தின் நோக்கமும் சிதைந்து போய்விடும். தி.மு.க., ஆட்சிக்கு எதிரான ஓட்டுகளை சிதறாமல் ஒருங்கிணைக்க வேண்டுமானால், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி வர வேண்டும். அப்படி வந்தால், பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணிக்குள் மிக எளிதாக வந்து விடும். இப்படி ஒரு வலிமையான கூட்டணி அமையும் வாய்ப்பை, பழனிசாமி தடுத்து விட்டார்.
அண்ணாமலையின் செயல்பாடுகளால், தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு 15 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என,ஏற்கனவே நான் கூறி இருந்தேன். ஆனால், தற்போது வெளியாகும் பல கருத்துக் கணிப்புகளிலும், தமிழகத்தில் அ.தி.மு.க.,வை விட அதிகமாக பா.ஜ.,வுக்கு 20 சதவீதம் வரை ஓட்டுகள் கிடைக்கும் என கூறியுள்ளன.
ஸ்டாலினுடனான, பழனிசாமியின் சமரசப் போக்கால், இனி தமிழக அரசியல் களம் தி.மு.க., -- பா.ஜ., என மாறிவிடும். இதைத் தடுக்கவே, தி.மு.க.வும், அ.தி.மு.க.,வும் மறைமுகமாக பேரத்தில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகப்படுவோரின் எண்ணம் தவறாக இருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us