sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

பல்வேறு கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு

/

பல்வேறு கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு

பல்வேறு கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு

பல்வேறு கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு

6


ADDED : ஏப் 19, 2024 11:57 PM

Google News

ADDED : ஏப் 19, 2024 11:57 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலையில் ஆரணி லோக்சபா தொகுதியில் சேத்துப்பட்டு அருகே கிழக்குமேடு கிராமத்தில், 750 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கான ஓட்டுச்சாவடி 4 கி.மீ., தொலைவில் அமைக்கப்பட்டதால், தேர்தலை புறக்கணித்தனர். அதிகாரிகள் பேச்சுக்கு பின், ஓட்டுப்பதிவு செய்ய சென்றனர்

* திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட தேனிமலை பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் பிள்ளைகளுக்கு எஸ்.டி., ஜாதி சான்றிதழ் தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்

* மயிலாடுதுறை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட தஞ்சாவூர் மாவட்டம் கோட்டூர் வாக்கு மையம் எண் 114ல், 170 வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இடம் பெறாததால், வாக்களர்கள் ஓட்டளிக்க முடியாமல் கல்லணை - பூம்புகார் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்

* ஓசூரில், தளி, வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிகளில், 250க்கும் மேற்பட்டோர் ஓட்டளிக்க சென்று, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டிருந்ததால் திருப்பினர்

* திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் எம்.பி.,யுமான குமார், நேற்று காலை ஓட்டளிக்கச் சென்றார். ஓட்டுச்சாவடி அலுவலர்கள், மையத்திற்குள் படம் எடுக்க அனுமதி இல்லை என்றனர். இதனால், ஓட்டளிக்காமல் அவர் திரும்பினார். பின், பகல், 12:30 மணிக்கு ஓட்டளித்தார்

* தஞ்சாவூர் அருகே இனாத்துக்கான்பட்டி கிராமத்தில் 150 வீடுகளில், 650 வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஓட்டு போடாமல், தேர்தலை புறக்கணித்தனர்

* ஒரத்தநாடு அருகே பின்னையூர் கிராமத்தில் கணக்கன் தெருவுக்கு செல்லும் பழுதடைந்த நடைபாலத்தை சீரமைக்காததை கண்டித்து, கணக்கன் தெருவை சேர்ந்த 175 வாக்காளர்கள் நேற்று தேர்தலை புறக்கணித்தனர்

* திருவண்ணாமலை, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில், எட்டு இடங்களில் ஓட்டுப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானதால் 1 மணி நேரம் தாமதமாக ஓட்டுப்பதிவு நடந்தது

* கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் கடவர்ஹள்ளி கிராமம், கருக்கனஹள்ளி ஆகிய கிராமங்களில் வீட்டு மனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராடியும் நடவடிக்கை இல்லாததால், அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்

* திருப்பூர் மாவட்டம் அன்னுார் அருகே கோபிராசிபுரம், கூலே கவுண்டன்புதுார் கிராமங்களில் குடிநீர் கேட்டு, அப்பகுதியிலர் தேர்தலை புறக்கணித்தனர்

* திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த முனகாடு கிராமத்தில் சாலையை சீரமைக்காததை கண்டித்து அப்பகுதியினர் தேர்தலை புறக்கணித்தனர்

* சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சித்துாரணியில் சாலை வசதி இல்லாதது, இளையான்குடி நகர் பகுதி கழிவுநீர் வருவது உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக, அந்த கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்

* காஞ்சிபுரம் பரந்துார் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எகனாபுரம், நாகப்பட்டு கிராம மக்கள் ஓட்டுப்பதிவை புறக்கணித்தனர்

* கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நல்லுார் சாலையில் டிரென்ட் சிட்டி என்ற தனியார் லே - அவுட் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், தேர்தலை புறக்கணித்தனர்

* சென்னை அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டம், குமாரராஜாபேட்டையில், விளைநிலங்களை கையகப்படுத்தியதை கண்டித்து தேர்தலை புறக்கணித்தனர்

* திண்டுக்கல் மாவட்டம் சின்ன அயன்குள பகுதி மக்கள், அடிப்படை வசதி கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்தனர்.

* புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, குற்றவாளிகள் கைது செய்யப்படாததால், எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம மக்கள் தேர்தலை புறங்கணித்துள்ளனர்

* கடலுார் மாவட்டம் பண்ருட்டி அருகே தனி ஊராட்சி கோரிக்கை தொடர்பாக எஸ். எரிப்பாளையம் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

சிப்காட் வேண்டாமென தேர்தல் புறக்கணிப்பு


நாமக்கல் மாவட்டம், மோகனுார் அடுத்த வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, பரளி, அருர் மற்றும் சுற்று வட்டார பகுதியில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிப்காட் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சிப்காட் தொழிற்பேட்டை வேண்டாம் என வலியுறுத்தி, லோக்சபா தேர்தல் புறக்கணிப்பு செய்து, வளையப்பட்டி - மோகனுார் சாலையில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மோகனுார் தாசில்தார் மணிகண்டன், இன்ஸ்பெக்டர் சவிதா உள்ளிட்டோர், பேச்சு நடத்தியும் மக்கள் ஓட்டு போட செல்லாமல் தேர்தலை புறக்கணித்தனர்.



அமைச்சருக்கு எதிர்ப்பு


துாத்துக்குடி அருகே உள்ள பொட்டலுாரணி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்புக்கு அறிவித்து இருந்தனர். அந்த பகுதியில் உள்ள மீன் கழிவு ஆலைகளை அகற்ற வேண்டும் என அவர்கள் நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், அதிகாரிகள் யாரும் அவர்களிடம் பேச்சு நடத்தவில்லை. இதனால், அவர்கள் நேற்று தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சு நடத்த தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அங்கு சென்றார். அவருடன் ஓட்டப்பிடாரம் தி.மு.க., - எம்.எல்.ஏ,, சண்முகையாவும் சென்றார்.
அவர்களின் கார் கிராமத்துக்குள் நுழைந்ததும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கிராம மக்கள் எதிர்ப்பால் அமைச்சர், எம்.எல்.ஏ., காரை விட்டு இறங்காமல் அங்கிருந்து கிளம்பினர்.இதற்கிடையே, கிராமத்திற்குள் ஸ்கார்பியோ காரில் ஆயுதங்களுடன் வந்த கும்பல் கள்ள ஓட்டு போட முயன்றது. அவர்களை பிடித்த போலீசார், வேனில் அழைத்து சென்றனர். அந்த வேனை மறித்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுபோன்ற பல காரணங்களால், 931 ஓட்டுகள் கொண்ட அந்த கிராமத்தில் 9 ஓட்டுகள் மட்டுமே பதிவானது.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us