sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

மாட்டு தொழுவத்தில் தயாரானது கள்ளநோட்டு; கூட்டு கிரைம் செய்த தந்தை, மகன் கைது

/

மாட்டு தொழுவத்தில் தயாரானது கள்ளநோட்டு; கூட்டு கிரைம் செய்த தந்தை, மகன் கைது

மாட்டு தொழுவத்தில் தயாரானது கள்ளநோட்டு; கூட்டு கிரைம் செய்த தந்தை, மகன் கைது

மாட்டு தொழுவத்தில் தயாரானது கள்ளநோட்டு; கூட்டு கிரைம் செய்த தந்தை, மகன் கைது


ADDED : ஜன 23, 2025 11:08 AM

Google News

ADDED : ஜன 23, 2025 11:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு; மாட்டு தொழுவத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விட்ட தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், டி.நரசிபுராவின் ஹிரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத், 53. இவரது மகன் நாகேஷ், 25. இருவரும் சேர்ந்து கள்ளநோட்டு அச்சிடுவதாக, டி.நரசிபுரா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவரது வீட்டில் போலீசார் சோதனையிட்டனர். பிரசாத்தின் படுக்கை அருகில் இருந்த பெட்டியில், 'எப்சன் கலர் பிரின்டர்' இருந்தது. காகிதம் வெட்டுவதற்கான கட்டிங் ஸ்கேல், காந்தி உருவப்படம், வாட்டர் மார்க், ரூபாய் நோட்டில் இருக்கும் வரியுடன் கூடிய வெள்ளை நிற தாள், மை பாட்டில்கள், 'ஏ 4' பேப்பர்கள் உட்பட கள்ளநோட்டு அச்சிட தேவையான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

'இஸ்பேட் கேம்'

வீட்டின் பின்புறத்தில் இருந்த மாட்டு தொழுவத்தில் வைத்து பணத்தை அச்சிட்டு வந்துள்ளனர். அங்கிருந்த 25,500 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இந்த பணத்தை, 'இஸ்பேட் கேம்' விளையாடும்போது, அதில் பந்தயம் கட்டி புழக்கத்தில் விட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தந்தை, மகனிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us