sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

தம்பட்டம் அடிக்க கோவில் கும்பாபிஷேகம்; ஹிந்து முன்னணி தலைவர் காட்டம்

/

தம்பட்டம் அடிக்க கோவில் கும்பாபிஷேகம்; ஹிந்து முன்னணி தலைவர் காட்டம்

தம்பட்டம் அடிக்க கோவில் கும்பாபிஷேகம்; ஹிந்து முன்னணி தலைவர் காட்டம்

தம்பட்டம் அடிக்க கோவில் கும்பாபிஷேகம்; ஹிந்து முன்னணி தலைவர் காட்டம்

11


ADDED : ஏப் 05, 2025 03:16 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 03:16 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: வெற்றுப்பெருமையை தம்பட்டம் அடித்துக்கொள்ள, தமிழக அரசு கோவில்களில் கும்பாபிேஷகம் நடத்துவதாக, ஹிந்து முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

அவ்வமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:


தென்காசி, காசி விஸ்வநாதர் கோவில் திருப்பணிகள் முழுதுமாக முடியாத நிலையில், அவசர கதியில் கும்பாபிஷேகம் நடத்த அரசு திட்டமிட்டது. அதற்கு மதுரை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், பல கோவில்களில் திருப்பணிகள் முறையாக நடக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. அரைகுறை பணிகளால் கும்பாபிஷேகம் முடிந்தும், பல கோவில்கள் பழுதான நிலையிலேயே உள்ளது.

பழனி முருகன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்களிலும் இப்பிரச்னை ஏற்பட்டது.

கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடைகளை அள்ளித் தருகின்றனர். ஆனால், நிர்வாகம் செய்யும் அலுவலர்கள், அறங்காவலர்கள் இதை முறையாக செலவிடுவதில்லை; முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.

தென்காசி விஸ்வநாதர் கோவிலில், கும்பாபிஷேக செலவுத் திட்டம், 1.67 கோடி ரூபாய் என அறிவித்துள்ளனர்.

செலவினங்கள், இஷ்டம்போல் காட்டப்பட்டுள்ளது.

திருச்செந்துார் கோவிலில் நடைபெறும் பணியில் அலட்சியத்தை, சுட்டிக்காட்டியவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அங்கு கட்டப்பட்டு வரும் மண்டபம் அதன் தடுப்புச்சாரம் அகற்றியவுடன் விழுந்து விட்டது. இதற்குப்பின், அரசு தரப்பில் அமைதி மட்டுமே காணப்படுகிறது.

தமிழக முதல்வர் இத்தனை ஆயிரம் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது என்று வெற்று தம்பட்டம் அடித்து, பெருமை பேசுவதை விடுத்து, கோவில்களில் உரிய காலத்தில் முறையான திருப்பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us