sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

'இல்லீகல் பார்'கள் அதிகரிப்பு; வரி செலுத்தும் ஓட்டல்கள் பாதிப்பு!

/

'இல்லீகல் பார்'கள் அதிகரிப்பு; வரி செலுத்தும் ஓட்டல்கள் பாதிப்பு!

'இல்லீகல் பார்'கள் அதிகரிப்பு; வரி செலுத்தும் ஓட்டல்கள் பாதிப்பு!

'இல்லீகல் பார்'கள் அதிகரிப்பு; வரி செலுத்தும் ஓட்டல்கள் பாதிப்பு!

12


UPDATED : ஜன 16, 2024 03:02 AM

ADDED : ஜன 15, 2024 11:19 PM

Google News

UPDATED : ஜன 16, 2024 03:02 AM ADDED : ஜன 15, 2024 11:19 PM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில், அரசுக்கு அதிகளவில் வருவாய் செலுத்தும் ஓட்டல் பார்களுக்கு மூடுவிழா நடத்தும் வகையில், மாநிலம் முழுவதும் 'இல்லீகல் பார்'கள் அதிகரித்து வருவதாக ஓட்டல் உரிமையாளர்கள் குமுறுகின்றனர்.

டாஸ்மாக் மது விற்பனை மூலமாக, தமிழக அரசுக்கு கடந்த ஆண்டில், ரூ.45 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள 4800க்கும் அதிகமான மதுக்கடைகளில் தான், மிக அதிக அளவிலான மது விற்பனை நடக்கிறது. இவற்றைத் தவிர்த்து, கிளப் மற்றும் ஓட்டல் பார்கள் ஆகியவற்றுக்கும் டாஸ்மாக் மூலமாகவே மது விநியோகிக்கப்படுகிறது.

இவற்றில் டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்கப்படும் மது வகைகள், அரசால் நேரடியாக விற்கப்படுவதால், அவற்றுக்குக் கூடுதல் வரி எதுவும் விதிக்கப்படுவதில்லை.

ஆனால் கிளப்களில் இயங்கும் பார்களுக்கு, மது பான விலையில் ஒரு சதவீதம் செஸ் வரியாக வசூலிக்கப்படுகிறது. ஓட்டல் பார்களுக்கு, இந்த ஒரு சதவீத செஸ் வரியுடன் 14.5 சதவீதம் 'வாட்' வரியும் சேர்த்து வசூல் செய்யப்படுகிறது.

தமிழகத்திலுள்ள ஆயிரக்கணக்கான ஓட்டல்களில், 836 ஓட்டல்களில் மட்டுமே, பார் நடத்துவதற்கான எப்.எல்.3 லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த லைசென்ஸ் பெறுவதற்கு, இத்தனை அறைகள் இருக்க வேண்டும், என்னென்ன வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட நிறைய விதிமுறைகள் உள்ளன. இந்த லைசென்ஸ்சை ஆண்டுதோறும் புதுப்பிக்கவும் வேண்டும்.

ஓட்டல்களின் அந்தஸ்தைப் பொறுத்து, ரூ.5 லட்சம், ரூ.6.5 லட்சம் ரூ.10 லட்சம், ரூ.25 லட்சம் (24 மணி நேர மது விற்பனைக்கான லைசென்ஸ்) வீதமாக, லைசென்ஸ் புதுப்பித்தல் கட்டணமும் செலுத்த வேண்டும்.

மது விற்பனையே நடக்காவிட்டாலும், இந்த லைசென்சை புதுப்பிப்பதற்கு, இந்தக் கட்டணத்தைச் செலுத்துவதைத் தவிர, வேறு வழியில்லை.

இதனால் தான், மற்ற இடங்களை விட, ஓட்டல் பார்களில் மது பானங்களின் விலை, பல மடங்கு அதிகமாகவுள்ளது.

ஆனால் டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகரித்த பின்பு, ஓட்டல் பார்களின் மது விற்பனை குறைந்துள்ளது.

மது பானங்களுக்கு செஸ், வாட் மற்றும் உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., என பல கோடி ரூபாய் வரிகளைச் செலுத்தி, அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் தங்களுடைய ஓட்டல் தொழிலைக் காப்பதற்கு, அரசு முன் வரவில்லை என்று ஓட்டல் உரிமையாளர்கள் குமுறுகின்றனர்.

எப்.எல்.,2 பார்களுக்கு லைசென்ஸ் வாரி வழங்குவதையும், 'இல்லீகல்' மது விற்பனையையும் நிறுத்துவதே, இப்பிரச்னைக்குத் தீர்வாகும்.

போலீஸ் மவுனத்தால் வேதனை

சமீபகாலமாக, கிளப்களுக்கான எப்.எல்.,2 பார் லைசென்ஸ்களும் வாரி வழங்கப்பட்டு, அங்கும் டாஸ்மாக் மதுக்கடைக்கு இணையாக மது விற்பனை நடக்கிறது.நகரங்களிலும், புறநகரப் பகுதிகளிலும், நெடுஞ்சாலைகளிலும் 'தாபா'க்கள் பெயரிலும், எப்.எல்.,2 பார்களிலும், டாஸ்மாக் பார்களிலும் 24 மணி நேரமும் 'இல்லீகல்' ஆக மது விற்பனை நடந்து வருகிறது. இந்த தாபாக்களிலும், பார்களிலும், மான் கறி, உடும்புக்கறி, முயல் கறி, காட்டுப்பன்றிக் கறி என சட்டவிரோதமாக உணவுப் பொருட்களும், விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், ஓட்டல் பார்களில் மது விற்பனை மட்டுமின்றி, உணவகங்களின் விற்பனையும் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று, ஓட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், போலீஸ் அதிகாரிகளிடம் பல முறை மனுக்கள் கொடுத்தும், பெயரளவில் கூட நடவடிக்கை எடுக்கப்படுவதேயில்லை.



-நமது சிறப்பு நிருபர்-






      Dinamalar
      Follow us