'ஸ்க்ரைப்' நடைமுறையில் அதிகரிக்கும் முறைகேடு: 6,000 பேருக்காக மாற்று நபர்கள் தேர்வெழுதும் மர்மம்
'ஸ்க்ரைப்' நடைமுறையில் அதிகரிக்கும் முறைகேடு: 6,000 பேருக்காக மாற்று நபர்கள் தேர்வெழுதும் மர்மம்
UPDATED : ஏப் 12, 2025 02:37 PM
ADDED : ஏப் 12, 2025 12:28 AM

கடலுார் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 'ஸ்க்ரைப்' எனப்படும் சொல்வதை எழுதுபவர் நடைமுறையில், முறைகேடுநடப்பதாக கல்வியாளர்கள் குற்றச்சாட்டுவைத்துள்ளனர்.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கிறது. பொதுத்தேர்வுகளில், பார்வையற்ற மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக, 'ஸ்க்ரைப்' எனப்படும் சொல்வதை எழுதுபவர் முறையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு எழுதுவர்.
இந்நடைமுறையில் சில ஆண்டுகளுக்கு முன்,கடலுார் மாவட்டத்தில் 10 முதல் 20 மாணவர்கள் தேர்வு எழுதினர். ஆனால், தற்போது 'ஸ்க்ரைப்' மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போது நடந்து முடிந்த பிளஸ் 1 பொதுத்தேர்வில் 318 மாணவர்களும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 425 மாணவர்களும் இம்முறையில் தேர்வு எழுதினர். தற்போது, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழகத்தில் 6,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், 'ஸ்க்ரைப்' முறையில் தேர்வு எழுதுகின்றனர்.
அதில், கடலுார் மாவட்டத்தில் மட்டும், 870 பேர் எழுதுகின்றனர். இது கடந்த ஆண்டுகளைவிட அதிகம். கல்வியில் பின்தங்கிய மாவட்டமான கடலுார் மாவட்டத்தில், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, 'ஸ்க்ரைப்' முறையை பள்ளி நிர்வாகங்கள் கையில் எடுத்துள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: பார்வையற்ற மாணவர்களை தொடர்ந்து தற்போது, நரம்பு தளர்ச்சி, உடல் நிலை பாதிப்பு, விபத்தில் காயம் உள்ளிட்ட நோய்களால் பாதித்த மாணவர்களும் 'ஸ்க்ரைப்' முறையில் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வுகளில் தோல்வியடையும் நிலையில் உள்ள மாணவர்களை 'ஸ்க்ரைப்' முறையில் தேர்வு எழுத அவர்களின் பெற்றோரிடம் பள்ளி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்துகின்றனர். இதற்காக, மருத்துவ சான்றிதழ் பெற்று தேர்வு துணை இயக்குநர் அலுவலகத்தில், விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கின்றனர்.
இதையடுத்து, மாணவர்களுக்கு சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர் நியமிக்க மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு, துணை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
ஆனால், தேர்வு எழுத ஆசிரியர்கள் யாரும் முன்வருவதில்லை. இதனால், மாணவர்களே, ஆசிரியர்களை ஏற்பாடு செய்யுமாறு கூறப்படுகிறது. அதன்படி, தங்களுக்கு தெரிந்த ஆசிரியர்களை, மாணவர்கள் அழைத்து வந்து தேர்வு எழுதுகின்றனர்.
இந்நடைமுறையில் தற்போது முறைகேடுகள் அதிகரிக்கின்றன. ஆசிரியர்கள் கேள்விகளை கூறிய பின், மாணவர்கள் கூறும் விடைகளை தான் எழுத வேண்டும். ஆனால், தற்போது ஆசிரியர்களே கேள்விகளுக்கு விடை எழுதுவதாக கூறப்படுகிறது.இதனால், முறைகேடு அதிகரித்துள்ளது. தேர்ச்சி பெற இதை ஒரு டெக்னிக்காக பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாணவர்களின் மருத்துவ சான்றிதழை மருத்துவக்குழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
தேர்வு எழுதும் ஆசிரியர் நியமனம் குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும். இதில், முறைகேடாக 'ஸ்க்ரைப்' முறையை பின்பற்றும் மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் மீது தேர்வு துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
விபரம் அறிந்த கல்வியாளர்கள் கூறியதாவது:
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், கையால் எழுத முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கும், தேர்வுக்கு முன் விபத்தில் சிக்கி, எழுதும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கும், உதவியாளரை நியமித்துக் கொள்ளும் சலுகை உண்டு.
அதாவது வினாவை, உதவியாளர் வாசிப்பார்.தேர்வெழுதும் மாணவர், அதற்கான விடையை கூறுவார்.அதைக் கேட்டு உதவியாளர், தேர்வுத்தாளில்எழுதுவார். இது, மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உரிமையை பாதுகாக்கவும், திடீர் விபத்தால் தேர்வெழுதமுடியாத மாணவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டவும்,இந்த முறையை அரசு அமலாக்கியது. துவக்கத்தில், இது உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்த நிலையில், தற்போது, இதில் பல்வேறு முறைகேடுகள்நடக்கின்றன.
முக்கியமாக, படிப்பில் சராசரிக்கும் கீழே உள்ளவர்களுக்கு, விபத்தில் கை எலும்பு முறிந்ததாக மருத்துவச் சான்றிதழ் பெற்று, 'ஸ்கிரைப்' எனும் தேர்வு உதவியாளரை நியமித்து, தலைமை ஆசிரியர்கள் முறைகேட்டில் ஈடுபடுகின்றனர்.
மேலும், மாற்றுத்திறனாளிகளில், இடது கை பாதிக்கப்பட்டவர்கள், மிகக்குறைந்த பாதிப்பு உள்ளவர்கள், வாய் பேச முடியாதவர்கள், கல்விகுறைபாடு உள்ளோருக்கும், 'ஸ்ரைப்' நியமிக்கின்றனர். இதில் நியமிக்கப்படும் ஸ்கிரைப் நபர், தான் சொல்வதை தவறாக எழுதினார் என குற்றம் சாட்டியதால், அந்தந்ததேர்வுக்கு அந்தந்த பாடம் சார்ந்த ஆசிரியர்களே நியமிக்கப்படுகின்றனர்.
அவ்வாறு ஸ்கிரைபாக செல்லும் ஆசிரியர்கள், மாணவர் தவறான பதில் சொன்னாலும், சரியான பதிலை எழுதுகின்றனர். சில மாணவர்கள், ஆசிரியர்களை நன்றாக படித்து வரும்படியும் வலியுறுத்துகின்றனர். இதனால், கல்வித் தரத்தில் குறைந்த மாணவர்கள் கூட, பள்ளியில் முதல் மதிப்பெண் பெறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தேர்வறைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினால், இவ்வாறான முறைகேடுகளை தவிர்த்து, நேர்மையான தேர்வை நடத்தலாம்.
இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில், சி.பி.எஸ்.இ., தேர்வறைகளிலும், 'சிசிடிவி கேமரா'க்கள் பொருத்தப்படுகின்றன. அதேபோல், தமிழகத்திலும் நிறுவினால், பல்வேறு முறைகேடுகளை தவிர்க்க முடியும். மாற்றுத்திறனாளி மாணவர்களால், தேர்வு சதவீதம் பாதிக்கப்படக் கூடாது என, அரசு நினைக்கிறது. அப்படியானால், அவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளித்து, தேர்ச்சி மதிப்பெண் வழங்கி விடலாம். நன்றாகப் படித்து, நேர்மையாக தேர்வெழுதி, நிறைய மதிப்பெண் பெற முடியும் என்ற நம்பிக்கையுள்ள மாணவர்களுக்கு மட்டும், ஸ்க்ரைப் நியமிக்கலாம். இப்படிப்பட்ட நிலை இல்லாததால்தான், போலி மருத்துவசான்றிதழ்களைப் பெற்று, முறைகேடுகளை செய்யும்படி, தலைமை ஆசிரியர்கள், ஸ்கிரைப் ஆசிரியர்களுக்கு நெருக்கடி தருகின்றனர்.
முன்பெல்லாம், மாவட்டத்தில், 10 - 20 என்றிருந்த ஸ்கிரைப் எண்ணிக்கை, தற்போது, 500 - 1,000 என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது. இது, தேர்வெழுதும் நோக்கத்தில் வந்த விழிப்புணர்வு அல்ல; முறைகேட்டில் ஈடுபடலாம் என்ற தவறான போக்கு. முக்கியமாக, நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக உள்ளவர்கள், வாய் பேச முடியாதவர்களுக்கு, அவர்களே தேர்வெழுதும் வகையில், கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கலாம். ஆனால், ஸ்கிரைப் நியமிக்கப்படுகின்றனர்.
அறிவையும், நம்பிக்கையையும் வழங்க வேண்டிய கல்வித் துறை, தேர்ச்சி விகிதம் என்ற எண்ணிக்கையை நோக்கி செல்வது வேதனையானது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
'ஸ்க்ரைப்' முறைகேடு: கண்காணிப்பு கேமரா பொருத்தினால் தவிர்க்கலாம்!
ஸ்க்ரைப் நடைமுறை விபரம் அறிந்த கல்வியாளர்கள் கூறியதாவது: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், கையால் எழுத முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கும், தேர்வுக்கு முன் விபத்தில் சிக்கி, எழுதும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கும், உதவியாளரை நியமித்துக் கொள்ளும் சலுகை உண்டு. அதாவது வினாவை, உதவியாளர் வாசிப்பார்.
தேர்வெழுதும் மாணவர், அதற்கான விடையை கூறுவார். அதைக் கேட்டு உதவியாளர், தேர்வுத்தாளில் எழுதுவார். இது, மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உரிமையை பாதுகாக்கவும், திடீர் விபத்தால் தேர்வெழுத முடியாத மாணவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டவும்,இந்த முறையை அரசு அமலாக்கியது. துவக்கத்தில், இது உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்த நிலையில், தற்போது, இதில் பல்வேறு முறைகேடுகள்நடக்கின்றன.
முக்கியமாக, படிப்பில் சராசரிக்கும் கீழே உள்ளவர்களுக்கு, விபத்தில் கை எலும்பு முறிந்ததாக மருத்துவச் சான்றிதழ் பெற்று, 'ஸ்கிரைப்' எனும் தேர்வு உதவியாளரை நியமித்து, தலைமை ஆசிரியர்கள் முறைகேட்டில் ஈடுபடுகின்றனர் மேலும், மாற்றுத்திறனாளிகளில், இடது கை பாதிக்கப்பட்டவர்கள், மிகக்குறைந்த பாதிப்பு உள்ளவர்கள், வாய் பேச முடியாதவர்கள், கல்விகுறைபாடு உள்ளோருக்கும், 'ஸ்ரைப்' நியமிக்கின்றனர்.
இதில் நியமிக்கப்படும் ஸ்கிரைப் நபர், தான் சொல்வதை தவறாக எழுதினார் என குற்றம் சாட்டியதால், அந்தந்ததேர்வுக்கு அந்தந்த பாடம் சார்ந்த ஆசிரியர்களே நியமிக்கப்படுகின்றனர். அவ்வாறு ஸ்கிரைபாக செல்லும் ஆசிரியர்கள், மாணவர் தவறான பதில் சொன்னாலும், சரியான பதிலை எழுதுகின்றனர். சில மாணவர்கள், ஆசிரியர்களை நன்றாக படித்து வரும்படியும் வலியுறுத்துகின்றனர். இதனால், கல்வித் தரத்தில் குறைந்த மாணவர்கள் கூட, பள்ளியில் முதல் மதிப்பெண் பெறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தேர்வறைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினால், இவ்வாறான முறைகேடுகளை தவிர்த்து, நேர்மையான தேர்வை நடத்தலாம்.
இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:கர்நாடக மாநிலத்தில், சி.பி.எஸ்.இ., தேர்வறைகளிலும், 'சிசிடிவி கேமரா'க்கள் பொருத்தப்படுகின்றன. அதேபோல், தமிழகத்திலும் நிறுவினால், பல்வேறு முறைகேடுகளை தவிர்க்க முடியும். மாற்றுத்திறனாளி மாணவர்களால், தேர்வு சதவீதம் பாதிக்கப்படக் கூடாது என, அரசு நினைக்கிறது. அப்படியானால், அவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளித்து, தேர்ச்சி மதிப்பெண் வழங்கி விடலாம்.
நன்றாகப் படித்து, நேர்மையாக தேர்வெழுதி, நிறைய மதிப்பெண் பெற முடியும் என்ற நம்பிக்கையுள்ள மாணவர்களுக்கு மட்டும், ஸ்க்ரைப் நியமிக்கலாம். இப்படிப்பட்ட நிலை இல்லாததால்தான், போலி மருத்துவசான்றிதழ்களைப் பெற்று, முறைகேடுகளை செய்யும்படி, தலைமை ஆசிரியர்கள், ஸ்கிரைப் ஆசிரியர்களுக்கு நெருக்கடி தருகின்றனர்.
முன்பெல்லாம், மாவட்டத்தில், 10 - 20 என்றிருந்த ஸ்கிரைப் எண்ணிக்கை, தற்போது, 500 - 1,000 என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது. இது, தேர்வெழுதும் நோக்கத்தில் வந்த விழிப்புணர்வு அல்ல; முறைகேட்டில் ஈடுபடலாம் என்ற தவறான போக்கு.முக்கியமாக, நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக உள்ளவர்கள், வாய் பேச முடியாதவர்களுக்கு, அவர்களே தேர்வெழுதும் வகையில், கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கலாம். ஆனால்,ஸ்கிரைப் நியமிக்கப்படுகின்றனர் அறிவையும், நம்பிக்கையையும் வழங்க வேண்டிய கல்வித் துறை, தேர்ச்சி விகிதம் என்ற எண்ணிக்கையை நோக்கி செல்வது வேதனையானது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த புகார் குறித்து, பொதுத் தேர்வு துறை இயக்குநர் லதா, இணை இயக்குநர் மகேஷ்வரியை தொடர்புகொண்டபோது, பதில் அளிக்க மறுத்து விட்டனர்
- நமது நிருபர் -