sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

மக்களிடம் ஹிந்து மத தலைவர்கள் பேச வேண்டியது கட்டாயம்: பா.ஜ.,

/

மக்களிடம் ஹிந்து மத தலைவர்கள் பேச வேண்டியது கட்டாயம்: பா.ஜ.,

மக்களிடம் ஹிந்து மத தலைவர்கள் பேச வேண்டியது கட்டாயம்: பா.ஜ.,

மக்களிடம் ஹிந்து மத தலைவர்கள் பேச வேண்டியது கட்டாயம்: பா.ஜ.,

27


UPDATED : ஆக 26, 2025 04:44 AM

ADDED : ஆக 26, 2025 04:42 AM

Google News

27

UPDATED : ஆக 26, 2025 04:44 AM ADDED : ஆக 26, 2025 04:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம்: இளைஞர்களிடம் ஆன்மிக பற்றை உருவாக்க வேண்டும் என, பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.

நாகையில் நடந்த விழாவில் அவர் பேசியதாவது:


நம் முன்னோர், அறுவடை செய்யும் விளை பொருட்களை ஆறு வகையாக பிரித்து வைத்து, கிராம கோவிலுக்கு; கோவிலை பராமரிப்போர், விவசாய தொழிலாளர், சேமிப்பு, இல்லாதோர் என பகிர்ந்து கொடுத்தனர்.

Image 1460963


அப்போது ஜாதிகள் கிடையாது. ஆங்கிலேயர் வந்த பின், இந்த நடைமுறை உடைக்கப்பட்டது. வரி வசூலித்தனர். அதன் பிறகு ஜாதி உருவானது.

எல்லா மதமும் சம்மதம் என்பது ஹிந்து மதம். அது வாழ்வியல் முறை. எல்லா மதத்திற்கும் தாய் மதம் ஹிந்து மதம். தாய் மொழியில் கீதையை படிக்கும்போது தனி சக்தி கிடைக்கிறது.

கடந்த 200 ஆண்டுகளில் ஹிந்து தர்மத்திற்கு எண்ணற்ற சோதனைகள் வந்துள்ளன. தற்போது, ஹிந்து மத குருக்கள் மக்களிடம் பேச வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.

அப்போதுதான் கிராம மக்களிடம் ஹிந்து மதம் பற்றிய புரிதல் கிடைக்கும். ஆன்மிக பற்றை இளைஞர்களிடம் உருவாக்க வேண்டும். எதையும் எதிர்பார்க்காமல், நம் வேலையின் மீது மட்டுமே பற்றுடன் இருக்க வேண்டும். இதுதான் கர்மா.

சில இடங்களில் நாம் கீழேயும், வேறு சில இடங்களில் மேலேயும் உட்காரும் நிலை வரும். கீழே உட்கார்ந்திருப்பவர் நாளை மேலே வரலாம்.

மேலே இருப்பவர், நாளை கடைசியில் அமரும் நிலை ஏற்படலாம். அமரும் இடம் முக்கியமில்லை; வேலையை சரியாக செய்ய வேண்டும். இது அனைவருக்கும் பொருந்தும். இவ்வாறு பேசினார்.






      Dinamalar
      Follow us