sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

தேசியம், திராவிடம் அல்லது தமிழகம்: கூட்டணி குறித்து ராமதாஸ் சூசகம்!

/

தேசியம், திராவிடம் அல்லது தமிழகம்: கூட்டணி குறித்து ராமதாஸ் சூசகம்!

தேசியம், திராவிடம் அல்லது தமிழகம்: கூட்டணி குறித்து ராமதாஸ் சூசகம்!

தேசியம், திராவிடம் அல்லது தமிழகம்: கூட்டணி குறித்து ராமதாஸ் சூசகம்!

7


ADDED : ஜன 09, 2026 05:16 AM

Google News

ADDED : ஜன 09, 2026 05:16 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: “தந்தைக்கு துரோகம் செய்த அன்புமணிக்கு மக்கள் ஓட்டளிக்க மாட்டார்கள்,” என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: பா.ம.க., நான் துவக்கிய கட்சி; வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது. நான் செய்த சத்தியத்தை மீறி, அன்புமணியை கட்சியில் சேர்த்து மத்திய அமைச்சராக்கினேன். அவர் எனக்கே வேட்டு வைப்பார் என அப்போது எனக்கு தெரியாது.

டில்லி உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, பா.ம.க.,வில் அன்புமணி இல்லை. கட்சி நிறுவனரான நானே, தலைவர் பதவியிலும் இருக்கிறேன். தந்தைக்கு துரோகம் செய்த அன்புமணிக்கு, மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். அன்புமணியுடன் கூட்டணி பேசுவது நீதிமன்ற அவமதிப்பு. அ.தி.மு.க.,வுடன் அன்புமணி கூட்டணி பேச்சு நடத்தியது நாடகம்.

அன்புமணியுடன் கூட்டணி அமைப்பது செல்லாது. அன்புமணி இருக்கும் கூட்டணியில் இடம் பெறுவோமா என்பது குறித்து, மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து இரண்டு நாளில் அறிவிப்போம்.

அரசியலில் எதுவும் நடக்கலாம். எந்த கட்சியுடன் வேண்டுமானாலும் கைகோர்க்கலாம். அது தேசியம், திராவிடம், தமிழகமாகவும் இருக்கலாம். கூட்டணி தொடர்பாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி என்னுடன் பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தனித்து போட்டியிட வைக்க தி.மு.க., திட்டம்

அ.தி.மு.க., கூட்டணியில் அன்புமணி பா.ம.க., இணைந்ததால், தி.மு.க., கூட்டணியில் சேர, ராமதாஸ் ஆதரவு பா.ம.க., கவுரவத் தலைவர் மணி பேச்சு நடத்துகிறார். ஆனால், அ.தி.மு.க., கூட்டணியில் அன்புமணிக்கு, 17 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக கூறுவதால், அதில், பாதி அளவுக்காவது தொகுதி ஒதுக்குமாறு ராமதாஸ் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.
அதன்படி, ராமதாசுக்கு 8 தொகுதிகளை ஒதுக்கினால், கூட்டணியில் இருக்கும் வி.சி., - ம.தி.மு.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்கும். ஏற்கனவே, 41 தொகுதிகளைக் கேட்டு அடம் பிடிக்கும் காங்கிரசுக்கும், அதிக இடங்களை ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இதனால், 170 தொகுதிகளில் போட்டியிட தீர்மானித்துள்ள தி.மு.க., தலைமை, 'ராமதாசை தனித்து போட்டியிட வைப்பது அல்லது அ.தி.மு.க., அல்லாத கூட்டணிக்கு அனுப்பி வைப்பது' என திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகள் கூறுகையில், 'தி.மு.க.,வுடன் கூட்டணி சேர, மணியும், ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தியும் விரும்புகின்றனர். தொகுதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டால், விஜயின் த.வெ.க.,வுடன் செல்லவும் ராமதாஸ் தயங்க மாட்டார்' என்றனர்.








      Dinamalar
      Follow us