sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 29, 2026 ,தை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

 இரட்டை இலக்க தொகுதிகள் குறைந்தால் ஒரு ராஜ்யசபா 'சீட்': தி.மு.க.,விடம் வி.சி., 'டிமாண்ட்'

/

 இரட்டை இலக்க தொகுதிகள் குறைந்தால் ஒரு ராஜ்யசபா 'சீட்': தி.மு.க.,விடம் வி.சி., 'டிமாண்ட்'

 இரட்டை இலக்க தொகுதிகள் குறைந்தால் ஒரு ராஜ்யசபா 'சீட்': தி.மு.க.,விடம் வி.சி., 'டிமாண்ட்'

 இரட்டை இலக்க தொகுதிகள் குறைந்தால் ஒரு ராஜ்யசபா 'சீட்': தி.மு.க.,விடம் வி.சி., 'டிமாண்ட்'

5


ADDED : ஜன 28, 2026 05:03 AM

Google News

5

ADDED : ஜன 28, 2026 05:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.மு.க., கூட்டணியில் இரட்டை இலக்கத்தில், 'சீட்' கேட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, அதில் எண்ணிக்கையை குறைத்தால், ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

வி.சி.,யை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர, அ.தி.மு.க., - த.வெ.க., போன்ற கட்சிகள் முயன்றன. ஆனால், சட்டசபை தேர்தலிலும், தி.மு.க., கூட்டணியிலேயே தொடர்வதாக, வி.சி., தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.

அதேநேரம், 'கூட்டணியில் தி.மு.க.,விற்கு அடுத்து வி.சி.,தான் அனைத்து தொகுதிகளிலும் பெரிய கட்சியாக இருக்கிறது. எனவே, தி.மு.க.,விற்கு அடுத்து வி.சி.,க்கு தான் அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும். குறிப்பாக, இரட்டை இலக்கத்தில் ஒதுக்க வேண்டும்' என, அக்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த முறை போலவே, இம்முறையும் ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கினால், கூடுதலாக ராஜ்யசபா சீட் ஒதுக்க வேண்டும் என, தி.மு.க., தலைமையிடம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



இது குறித்து, வி.சி., கட்சியினர் கூறியதாவது: சிறிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க, தி.மு.க., விரும்புகிறது. அக்கட்சிகளுக்கும் சீட் ஒதுக்குவதோடு, தி.மு.க.,வும் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும்.

நாங்கள் கூடுதல் இடங்கள் ஒதுக்கும்படி கேட்டு வருகிறோம். ஒருவேளை, இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்காவிட்டால், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us