UPDATED : பிப் 23, 2024 06:43 AM
ADDED : பிப் 23, 2024 04:42 AM

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, வரும் 27, 28ல் தமிழகம் வருகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நேற்று வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து, 27ம் தேதி மதியம் பிரதமர் மோடி, விமானத்தில், கோவை சூலுார் வருகிறார். அங்கிருந்து அவர், ஹெலிகாப்டரில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் செல்கிறார். அங்கு பிற்பகல், 2:45 மணிக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின், 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழாவில், பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
பின், அவர் அங்கிருந்து, ஹெலிகாப்டரில் மதுரை செல்கிறார். மாலை 5:15 மணிக்கு டி.வி.எஸ்., லட்சுமி பள்ளியில் நடக்கும் வாகன துறைக்கான குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான, 'டிஜிட்டல் மொபிலிட்டி' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இதில் தென்மாவட்ட தொழிலதிபர்களுடன், இந்திய அளவில் பெருந்தொழிலதிபர்களாக இருக்கும் மஹேந்திரா, பஜாஜ் போன்றோரும் பங்கேற்க உள்ளனர்.
டி.வி.எஸ்., நிறுவன அழைப்பின் பேரில் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் பங்கேற்று தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடுகிறார்.
நிகழ்ச்சி முடிந்த பின், அன்று இரவு மதுரையில் உள்ள தாஜ் ஓட்டலில் தங்குகிறார்.
மறுநாள் காலையில், மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் துாத்துக்குடி செல்கிறார். குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதள திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், முடிவுற்ற அரசு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
அங்கிருந்து, ஹெலிகாப்டரில் திருநெல்வேலி செல்லும் பிரதமர் மோடி, பகல் 11:15 மணிக்கு பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். தமிழக பயணத்தை முடித்து, மஹாராஷ்டிரா செல்கிறார்.
பிப்.27:
மதியம் 1:20 மணி: திருவனந்தபுரத்தில் இருந்து தனிவிமானத்தில் புறப்படுதல்.
2:05க்கு கோவை சூலுார் வருகை
2:10 ெஹலிஹாப்டரில் பல்லடம் புறப்படுதல்
2:30 பல்லடம் ெஹலிகாப்டர் தளம் சேர்தல்.
2:40 பல்லடம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு
3:50 பொதுக்கூட்டம் முடிந்து காரில் புறப்படுதல்
3:55 பல்லடம் ெஹலிகாப்டர் தளம் சேர்தல்
4:00 பல்லடத்தில் இருந்து ெஹலிகாப்டரில் புறப்படுதல்
5:00 மதுரை வீரபாஞ்சான் டி.வி.எஸ்., லட்சுமி பள்ளி வருகை
5:05 நிகழ்விடத்திற்கு காரில் வருதல்
5:15 சிறு, குறுந்தொழில்கள் குறித்து டிஜிட்டல் கருத்தரங்கில் தொழிலதிபர்களுடன் சந்திப்பு
6:15 டி.வி.எஸ்., லட்சுமி பள்ளியில் இருந்து புறப்படுதல்
6:45 பசுமலை தாஜ் ஓட்டல் வருகை, இரவு தங்கல்
--
பிப். 28:
-----
காலை 8:15 மணி பசுமலை தாஜ் ஓட்டலில் இருந்து காரில் புறப்படுதல்
8: 35 மதுரை விமான நிலையம் வருகை
8:40 மதுரை விமான நிலையத்தில் இருந்து ெஹலிகாப்டரில் புறப்படுதல்
9:30 துாத்துக்குடி ெஹலிகாப்டர் தளம் சென்று சேர்தல்
9:35 ெஹலிகாப்டர் தளத்தில் இருந்து காரில் புறப்படுதல்
9:40 துாத்துக்குடி துறைமுகம் வருகை
9:45 - 10:30 பாம்பன் துாக்குப்பாலம் அர்ப்பணிப்பு, குலசேகரன்பட்டினம் ஏவுகணைத்தளம் அடிக்கல் நாட்டுதல்
10:30 துறைமுகத்தில் இருந்து புறப்படுதல்
10:35 துாத்துக்குடி ெஹலிகாப்டர் தளம் வருகை
10:40 ஹெலிகாப்டரில் புறப்படுதல்
11:05 திருநெல்வேலி ெஹலிகாப்டர் தளம் வருகை
11:10 பொதுக் கூட்ட மைதானத்திற்கு காரில் புறப்படுதல்
11:15 பொதுக் கூட்டம் மைதானம் வருகை
மதியம் 12:20 பொதுக் கூட்டம் முடிந்து புறப்படுதல்
12:25 திருநெல்வேலி ெஹலிகாப்டர் தளம் வருகை.
12:30 ெஹலிகாப்டரில் புறப்படுதல்
1:30 திருவனந்தபுரம் சேர்தல்