sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

தேர்தல் ஆணையத்தை அணுக ராமதாஸ் - அன்புமணி முடிவு

/

தேர்தல் ஆணையத்தை அணுக ராமதாஸ் - அன்புமணி முடிவு

தேர்தல் ஆணையத்தை அணுக ராமதாஸ் - அன்புமணி முடிவு

தேர்தல் ஆணையத்தை அணுக ராமதாஸ் - அன்புமணி முடிவு

5


ADDED : ஜூலை 10, 2025 04:25 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 04:25 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பா.ம.க.,வில் ராமதாஸ், அன்புமணி இருதரப்பும், தேர்தல் ஆணையத்தை அணுக இருப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் அக்கட்சி தலைவருமான அன்புமணிக்கும் இடையிலான மோதல், ஆறு மாதங்களை கடந்தும் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது.

பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டு, 'நானே தலைவர்' என ராமதாஸ் அறிவித்தார். இப்போது அன்புமணியையும், அவரது ஆதரவாளர்களையும் நீக்கிவிட்டு, புதிய நிர்வாகக் குழுவை ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் செயற்குழு கூட்டத்தை நடத்திய ராமதாஸ், வரும் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வை துவங்கி விட்டதாக தெரிவித்தார்.

உடனடியாக, சென்னை பனையூரில் பா.ம.க., அரசியல் தலைமைக்குழு கூட்டத்தை கூட்டிய அன்புமணி, 'பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் இல்லாமல் நடக்கும் நிர்வாகக்குழு, செயற்குழு, பொதுக்குழு எதுவும் செல்லாது' என, தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

முன்னதாக, அருள் எம்.எல்.ஏ.,வை கொறடா பொறுப்பில் இருந்து நீக்க அன்புமணி, சபாநாயகரிடம் கடிதம் கொடுத்ததை அடுத்து, சட்டசபையில் கட்சி இரண்டாக உடைந்தது.

அடுத்தக்கட்டமாக பொதுக்குழுவை கூட்ட ராமதாஸ் தயாராகி வருகிறார். அதற்கு வசதியாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பொதுக்குழுவில் ராமதாஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அது பிரச்னையை மேலும் பெரிதாக்கி விடும் என்பதால், அதை தடுக்கும் வகையில், தேர்தல் ஆணையத்தை அன்புமணியும் அணுக இருப்பதாக, அவரது அணியினர் தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us