sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

மழை ஆய்வு பணியில் உதயநிதி தனி 'ரூட்'; ஆளும் கட்சி நிர்வாகிகள் 'அப்செட்'

/

மழை ஆய்வு பணியில் உதயநிதி தனி 'ரூட்'; ஆளும் கட்சி நிர்வாகிகள் 'அப்செட்'

மழை ஆய்வு பணியில் உதயநிதி தனி 'ரூட்'; ஆளும் கட்சி நிர்வாகிகள் 'அப்செட்'

மழை ஆய்வு பணியில் உதயநிதி தனி 'ரூட்'; ஆளும் கட்சி நிர்வாகிகள் 'அப்செட்'

8


ADDED : அக் 25, 2025 04:42 AM

Google News

8

ADDED : அக் 25, 2025 04:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், துணை முதல்வர் உதயநிதி தலைமையில், சமீபத்தில் சென்னையில் தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடந்தது.

அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அக்கூட்டத்தில், உதயநிதி பேசியுள்ளதாவது:


நாம் ஒருங்கிணைந்து மக்களுக்கு உதவ வேண்டும். மழை பெய்த பல இடங்களுக்கு சென்றேன். தொடர் மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. கொஞ்ச நேரம் வெயில் அடித்தால், அந்த நீர் வடிந்து விடும்.

மழைநீர் தேங்கும்போது, மக்கள் உங்களை அழைத்தால், உடனே அங்கு சென்று மக்களுக்கு உதவுங்கள். அப்படி அழைத்தால், மக்களுக்கு உதவி தேவை என்று அர்த்தம். யாரும் கோபத்தை காட்ட, உங்களை கூப்பிட மாட்டார்கள்.

முதல்வர், அமைச்சர்களின் கவனத்துக்கு சென்றால், இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று, மக்கள் நம்புகின்றனர். அந்த வகையில், இந்த மழையில் மக்களோடு மக்களாக நாம் நின்றோம் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இதில், 'நாம் ஒருங்கிணைந்து மக்களுக்கு உதவ வேண்டும்' என, உதயநிதி பேசியுள்ளார்.

ஆனால், அவரே முன்மாதிரியாக செயல்படாமல், தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில், தனியாக சென்று, மழை, வெள்ளம் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்கிறார். கட்சி நிர்வாகிகள் யாரையும் உடன் அழைத்துச் செல்லவில்லை என, அவரது கட்சியினர் புகார் வாசிக்கின்றனர்.

இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:


தென்சென்னை பகுதியில், நீர்வழிப் பாதைகளில் நடக்கும் சீரமைப்பு பணிகளை, உதயநிதி பார்வையிட்டார். பழைய மகாபலிபுரம் சாலை, பள்ளிக்கரணை பகுதிகளிலும் ஆய்வு செய்தார். அதிகாரிகளை மட்டுமே அழைத்து சென்றார்.

மாவட்ட அமைச்சர் சுப்பிரமணியன், மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்கள், பகுதி, வட்ட செயலர்கள் என, எந்த நிர்வாகிகளுக்கும் அழைப்பு இல்லை.

தனி நபராக உதயநிதி சென்று வந்ததை, கட்சி நிர்வாகிகள் ரசிக்கவில்லை. உதயநிதியுடன் நாங்களும் பணியில் இருந்தால் தானே, எங்களை அதிகாரிகளும், மக்களும் மதிப்பர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதெல்லாம் முக்கியம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஐ.ஏ.எஸ்.,கள் அலைக்கழிப்பு

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து, கடந்த 21ம் தேதி தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், தலைமை செயலர், நிதித் துறை செயலர் உள்ளிட்ட, துறை செயலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு பின், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள உதயநிதி முகாம் அலுவலகத்தில், அவரது தலைமையில், மற்றொரு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தலைமை செயலகம் கூட்டத்தில் பங்கேற்ற, அதே ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும், துறை செயலர்களும், இதிலும் பங்கேற்றனர். முதல்வர் நடத்திய கூட்டத்தில் உதயநிதியும் பங்கேற்ற நிலையில், அவரது தலைமையில் தனிக் கூட்டம் நடத்தியது, தங்களை அலைக்கழிக்கும் செயல் என, ஐ.ஏ.எஸ்., வட்டாரத்தில் பேசப்படுகிறது.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us