இளைஞர்களை வதைக்கும் கடன் சுமை: ஆய்வறிக்கைகளில் அதிர்ச்சி தகவல்
இளைஞர்களை வதைக்கும் கடன் சுமை: ஆய்வறிக்கைகளில் அதிர்ச்சி தகவல்
UPDATED : ஜன 16, 2026 01:47 AM
ADDED : ஜன 16, 2026 01:21 AM

இந்தியாவில் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே, கடன் திருப்பிச் செலுத்தும் திறன் குறைவாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இளம் வயதினர் வாங்கும் கடன்கள் மற்றும் அவை திருப்பிச் செலுத்தப்படும் விதம் குறித்து 'கிரிப் ஹை மார்க்' ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், தனிநபர் கடன், கிரெடிட் கார்டு, கார் மற்றும் இருசக்கர வாகன கடன்களில் இளம் வயதினரிடம் நிலுவை அதிகம் காணப்படுகிறது.
2025, நவம்பர் நிலவரப்படி, 25 வயதிற்குட்பட்டவர்களிடம் 2.60 சதவீதம் மற்றும் 26-30 வயதுள்ளவர்களின் பிரிவில் 2.70 சதவீதம் கடன்கள் செலுத்தப்படாமல் உள்ளன. உத்தர பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் கடன் பெறும் இளைஞர்கள் அதிகம். இளம் வயதில் அதிக கடன் எதிர்கால நிதி நிலைத்தன்மைக்கு சவாலாக இருக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

